ஜப்பானின் சுகோகு பிராந்தியத்தில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை

6 ஜனவரி 2026, 10:01 AM
ஜப்பானின் சுகோகு பிராந்தியத்தில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை

தோக்கியோ, ஜன 6- ஜப்பானின் மேற்கு சுகோகு பிராந்தியத்தை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவான நிலநடுக்கம் தாக்கியது. அதனைத் தொடர்ந்து பல நில அதிர்வுகளும் ஏற்பட்டன.

முதல் நிலநடுக்கத்தின் மையம் ஷிமானே மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் இருந்தது. சுனாமி ஆபத்து இல்லை என்றும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சுகோகு எலெக்ட்ரிக் பவர் நிறுவனம், சுமார் 32 கிலோமீட்டர் (20 மைல்) தொலைவில் உள்ள ஷிமானே அணுமின் நிலையத்தை இயக்குகிறது.

ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், அணுமின் நிலையத்தில் எந்தவித அசாதாரண சூழ்நிலையும் இல்லை என்று கூறியது.

அணுமின் நிலையத்தின் எண் 2 அலகில் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருவதாக ஒரு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்த அலகு, 2011 மார்ச் மாதம் ஃபுகுஷிமாவில் ஏற்பட்ட பேரழிவுகளுக்குப் பிறகு மூடப்பட்டு, டிசம்பர் 2024 முதல் மீண்டும் செயல்பட்டு வருகிறது

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.