PTPTN மறுசீரமைப்பு: கடன் செலுத்தாத கடனாளிகள் மட்டுமே இலக்கு

5 ஜனவரி 2026, 4:18 AM
PTPTN மறுசீரமைப்பு: கடன் செலுத்தாத கடனாளிகள் மட்டுமே இலக்கு

மஞ்சோங், ஜனவரி 5 – தேசிய உயர்கல்வி நிதி நிறுவனத்தின் கடன் திருப்பிச் செலுத்தும் மறுசீரமைப்பு, கடன் பெறுவோரின் வீட்டுக் கடன்கள் அல்லது பிற தனிநபர் கடன்களைப் பாதிக்காது என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காடீர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை, இதுவரை எந்தக் கட்டணமும் செலுத்தாத மற்றும் தங்கள் நிதி நிலைமை குறித்து பிடிபிடிஎன்-ஐ தொடர்புகொள்ளாத கடன் பெறுவோருக்கு மட்டுமே பொருந்தும் என்றார் அவர்.

பிடிபிடிஎன் கடன்களைத் திருப்பிச் செலுத்துவது ஒரு பெரிய சுமையாக கடன் பெறுவோர் உணரக்கூடாது என நாங்கள் விரும்புகிறோம். “சிரமங்களை எதிர்கொள்பவர்கள் முன்வந்து தங்கள் நிலைமை குறித்து விவாதிக்கலாம். இது குறித்து பிடிபிடிஎன்-க்கு நான் தெரிவித்துள்ளேன், அதன் தலைமை நிர்வாகி அஹ்மட் தாசுகி அப்துல் மாஜித், இத்தகைய கலந்துரையாடலுக்கான வாய்ப்பை வழங்குமாறு அரசாங்கத்தின் உத்தரவை உறுதிப்படுத்த முடியும்,” என்று மெர்டேக்கா அரங்கில் 1,350 மாணவர்களுக்குப் பள்ளிக்குத் திரும்புவோம் திட்டத்தின் கீழ் உதவிகளை வழங்கிய பின்னர் அவர் தெரிவித்தார்.

மேலும் தேசிய கல்வி சேமிப்புத் திட்டம் (SSPN) தற்போது சுமார் RM20 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது தங்கள் குழந்தைகளின் கல்விக்காகச் சேமிக்க வேண்டியதன் அவசியம் குறித்த பெற்றோர்களிடையே அதிகரித்து வரும் விழிப்புணர்வை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

“பிடிபிடிஎன் கடன்களைத் தவிர, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர உதவும் வகையில், Siswa Sulung திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை அரசாங்கம் வழங்குகிறது,” என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.