ஷா ஆலம், செப் 3 - கடந்த மாதம் 24ஆம் தேதி சபாக் பெர்ணமில் உள்ள உறைவிடப் பள்ளி விடுதி கட்டிடத்திலிருந்து மூன்றாம் படிவ மாணவர் விழுந்தது தொடர்பான விசாரணை அறிக்கையை போலீசார் தயாரித்து வருகின்றனர்.
அந்த தங்கும் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளை ஆய்வு செய்வது உட்பட சம்பவ இடத்தில் தமது துறை விசாரணையை முடித்த பின்னர் விசாரணை அறிக்கையை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது என்று சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் கூறினார்.
விசாரணை அறிக்கையை தயாரிக்கும் பணியின் ஒரு பகுதியாக பலரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மேலும் விசாரணைக்கு உதவ குற்றம் நடந்த இடத்தில் விசாரணை நடத்துவது உட்பட நிறைய ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணை உண்மையில் முடிக்கப்பட்டுள்ளது.
விசாரணை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டப் பின்னர் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனை மற்றும் கருத்துக்களைப் பெறுவதற்காக மாநில அரசு துணை வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மாநில அரசு வழக்கறிஞர் அலுவலகத்திடம் முழு விளக்கம் அளிக்கப்படும் வரை இந்த வழக்கில் பகடிவதை அல்லது வேறு ஏதாவது சம்பவம் நிகழ்ந்துள்ளதா என்பதை தங்களால் உறுதியாகக் கூற முடியாது என்று ஷாசெலி கூறினார்.
பாதிக்கப்பட்டவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் ஆனால் பல நபர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் விளைவாக விசாரணைக்கு உதவக்கூடிய நேர்மறையான தடயங்களைத் தாங்கள் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கு 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் சொன்னார்.
தங்கும் விடுதியிலிருந்து மாணவர் விழுந்த சம்பவம் - விசாரணை அறிக்கையை தயாரிக்கும் பணியில் போலீஸ் தீவிரம்
3 செப்டெம்பர் 2025, 10:17 AM
தொடர்புடைய செய்திகள்
selangor
உறைவிடப் பள்ளிகளில் பகடிவதை- சிலாங்கூரில் தீவிர கண்காணிப்பு
Rajah Ramaya
13 ஆகஸ்ட் 2025

national
பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து படிவம் 3 மாணவர் விழுந்தால் - காவல்துறை விசாரணை
Shalini Rajamogun
26 ஆகஸ்ட் 2025

national
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூடுதலாக RM100 உதவித் தொகை வழங்குவது குறித்து பரிசீலனை
Shalini Rajamogun
19 ஆகஸ்ட் 2025

national
பள்ளி மாணவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம்
Shalini Rajamogun
13 ஆகஸ்ட் 2025

உங்கள் கருத்து என்ன?




