ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் இரண்டு மாவட்டங்களில் மாலை கனமழை எச்சரிக்கை

17 ஜூன் 2022, 8:16 AM
சிலாங்கூரில் இரண்டு மாவட்டங்களில் மாலை கனமழை எச்சரிக்கை

ஷா ஆலம், ஜூன் 17 - சிலாங்கூரில் இரண்டு மாவட்டங்களில் இன்று மாலை 5 மணி வரை பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கோலா சிலாங்கூர் மற்றும் கிள்ளான் மாவட்டங்களும் இதில் அடங்கும். அதேபோல் மலாக்கா முழுவதும் பாதிக்கப்படும் என எச்சரிக்கைகள் விடுத்துள்ளது.

கெடாவில் (யான், பென்டாங், கோலா மூடா, சிக், பாலிங், கூலிம் மற்றும் பண்டார் பாரு), பினாங்கு (செபெராங் பேராய் உதாரா, செபெராங் பேராய் தெங்கா மற்றும் செபெராங் பேராய் செலாதான்), பேராக் (லாருட், மாத்தாங் மற்றும் செலாமா, உலு பேராக், கோலா கங்சார், கிந்தா, கம்பார் மற்றும் பாத்தாங் பாடாங்), நெகிரி செம்பிலான் (சிரம்பான், போர்ட் டிக்சன் மற்றும் ரெம்பாவ்) மற்றும் ஜோகூர் (தங்காக்) ஆகிய இடங்களில் மோசமான வானிலையையும் நிறுவனம் கணித்துள்ளது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழைப்பொழிவு ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மிமீ/ மணி நேரம்) அதிகமாக இருக்கும் என எச்சரிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும், இது ஒரு வெளியீட்டிற்கு ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் இருக்கும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.