SMK தாமான் மெலாவதி மாணவர் நெரிசல் பிரச்சினையைத் தீர்க்க RM500,000-க்கும் மேல் திரட்டியது

18 ஜனவரி 2026, 12:51 PM
SMK தாமான் மெலாவதி மாணவர் நெரிசல் பிரச்சினையைத் தீர்க்க RM500,000-க்கும் மேல் திரட்டியது

அம்பாங் ஜெயா, 18 ஜனவரி: பள்ளியில் மாணவர்கள் நெரிசல் பிரச்சினையை சமாளிக்க,  (SMK) தாமான் மெலாவதி பள்ளி ஒரு தானுடை இரவு உணவு விழா மூலம் RM500,000-க்கும் மேல் திரட்டியுள்ளது.

மொத்தத் தொகையில், RM100,000 நன்கொடையை டத்தோ மந்திரி புசாரின் அலுவலகமும், சிலாங்கூர் மந்திரி புசார் (நிறுவனம்) அலுவலகமும் (MBI) வழங்கியுள்ளது. இதை மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அந்த விழாவில் அறிவித்தார்.

பள்ளியின் தலைமையாசிரியர் ஜக்தேவ் சிங் அவ்தார் சிங் கூறுகையில், தற்போது இப்பள்ளியில் 2,524 மாணவர்கள் பயில்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிகரித்து வருகின்றனர். ஆனால் தற்போது உள்ள வசதிகள் தற்போதைய தேவைகளுக்குப் போதவில்லை.

“எங்கள் முக்கிய பிரச்சினை நெரிசல் தான். தற்போது உள்ள மண்டபம் சுமார் 1,000 பேரை மட்டுமே கொண்டு தங்க வைக்க முடியும். ஆனால் ஒரு பகுதி மாணவர்களின் எண்ணிக்கையே அதன் அளவை மீறி விடுகிறது.

“உள்கட்டமைப்பு எண்ணிக்கை அதே அளவிலேயே உள்ளது, கழிப்பறைகள் மற்றும் விசிறிகள் போதவில்லை.

“தற்போதைய பள்ளிகள் அரசு நிதியை மட்டுமே நம்பி இருக்க முடியாது. வெளிப்புறத் தரப்பினருடன் இணைந்து மாற்று நிதி ஆதாரங்களை தேட வேண்டும்” என்றார்.

நேற்று இரவு இங்குள்ள MPAJ மாநாட்டு மையத்தில் SMK தாமான் மெலாவதி பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PIBG) ஏற்பாடு செய்த விருந்தின் பின்னர் அவரிடம் நிருபர்கள் பேசினர்.

இந்த விழாவில் டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் சமூக நல விவகாரங்களுக்கான செயற்குழு உறுப்பினர் (EXCO) அன்பால் சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜக்தேவ்   கூறுகையில், சேகரிக்கப்பட்ட நிதி குறிப்பாக திரளல் மற்றும் பள்ளியின் பல்வேறு செயல் பாடுகளுக்காக ஒரு திறந்தவெளி மண்டபம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும்.

இதுவே முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்விற்கு ஊக்கமளிக்கும் வகையில் பதில் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னாள் மாணவர்கள், நிறுவனங்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களின் பங்களிப்புடன் கிட்டத்தட்ட 64 மேஜைகள் விற்கப்பட்டன.

“இங்கு பணியாற்றிய ஓர் முன்னாள் ஆசிரியரை நான் கண்டுபிடித்தேன், அவர் இந்த இரவு உணவு மேஜையை RM10,000-க்கு வாங்கினார். RM2,500 முதல் RM5,000 வரை தங்கள் பங்களிப்பை வழங்கிய பெற்றோர்களும் உள்ளனர்.

“நாங்கள் நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள் (NGO), முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து முயற்சி செய்கிறோம். கடந்த ஆண்டு இரவு உணவு விழா இல்லாமல், வெளிப்புறத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் நாங்கள் கிட்டத்தட்ட RM200,000 சேகரித்தோம்” என்றார்.

மாநில அரசின் நன்கொடை குறித்து கருத்து தெரிவித்த  ஜக்தேவ்  , மந்திரி புசார் சிலாங்கூரில் உள்ள பிற பள்ளிகளுக்கும் உதவ வேண்டும் என்பதால், அதிக நிதி உதவி கிடைக்கும் என்று எதிர் பார்க்க வில்லை என்றார்.

“அவருக்கு (அமீருதீன்) மற்ற பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் பொறுப்பு உள்ளது என்பதால், இந்த அளவுக்கு அதிக நிதி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

“SMK மெலாவதி இவ்வளவு உதவி தேவைப்படும் ஒரு மிகவும் பின்தங்கிய பள்ளி அல்ல, ஆனால் வழங்கப்பட்ட நன்கொடைக்கு நாங்கள் மிகவும் நன்றியுடன் இருக்கிறோம்” என்று   ஜக்தேவ்   கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.