பேர்லி-தீனா, ஆரோன்-வூய்யிக் இந்திய ஓப்பன் அரையிறுதியில் களமிறங்குகிறார்கள்

17 ஜனவரி 2026, 5:09 AM
பேர்லி-தீனா, ஆரோன்-வூய்யிக் இந்திய ஓப்பன் அரையிறுதியில் களமிறங்குகிறார்கள்
பேர்லி-தீனா, ஆரோன்-வூய்யிக் இந்திய ஓப்பன் அரையிறுதியில் களமிறங்குகிறார்கள்

பேர்லி-தீனா, ஆரோன்-வூய்யிக் இந்திய ஓப்பன் அரையிறுதியில் களமிறங்குகிறார்கள்**கோலாலம்பூர், ஜனவரி 16 — மலேசியாவின் முதன்மை மகளிர் இரட்டையர் ஜோடியான பேர்லி தான்-தீனா முரளிதரன், இன்று புது டில்லியில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் தைவானின் ஹியேஷ் பெய் ஷான்-ஹங் என் தூ என்ற  ஜோடியை வீழ்த்தி, இந்திய ஓப்பன் பூ பந்து போட்டியில் மலேசிய வெற்றிக் கொடியை உயர்த்திப் பிடித்தனர்.உலக தரவரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள மலேசிய ஜோடி பெய் ஷான்-என் தூ  ஜோடியை இந்திரா காந்தி விளையாட்டு மையத்தில் வெறும் 33 நிமிடங்களில் 21-16, 21-10 என்ற புள்ளி கணக்கில்   வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.  பேர்லி-தீனா நாளை அரையிறுதியில் ஜப்பானின் யுகி ஃபுகுஷிமா-மாயு மட்சுமோட்டோ என்ற ஜோடியை எதிர்கொள்ளும்.அதேநேரம், தேசிய மகிழ் இரட்டையர் சோடியான ஆரோன் சியா-சோ வூய்யிக், தைவானின் லீ ஜே-ஹுய்-யாங் போ ஹ்சுவான் ஜோடியை 21-19, 21-14 என்ற நேரடி செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.உலக இரண்டாம் தரவரிசையில் உள்ள இந்தச் ஜோடி, அரையிறுதியில் தைவானின் லியூ குவாங் ஹெங்-யாங் போ ஹான் அல்லது ஜப்பானின் ஹிரோக்கி மிடோரிகாவா-கியோஹே யமாஷிதா  ஜோடிகளில் ஒருவரை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.கலப்பிரட்டையர் பிரிவில், தேசிய ஜோடியான கோ சூன் ஹுவாட்-ஷெவான் லாய், சீனாவின் முதல் நிலை    ஃபெங் யான் ஜே-ஹுவாங் டோங் பிங் ஜோடியிடம், 19-21, 21-19, 18-21 என்ற இறுக்கமான போட்டியில் தோல்வியடைந்தனர்.
அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.