மலேசிய சர்வதேச கடப்பிதழ் மோசடி கும்பல் முறியடிப்பு

16 ஜனவரி 2026, 1:52 AM
மலேசிய சர்வதேச கடப்பிதழ் மோசடி கும்பல் முறியடிப்பு

புத்ராஜெயா, 16 ஜனவரி: மலேசிய சர்வதேச கடப்பிதழ் விண்ணப்பச் செயல்பாட்டில் முறைகேடு மற்றும் ஆவண மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை, நேற்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையின் மூலம் அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் போது, ‘ஏற்பாட்டாளராக’ செயல்பட்டதாக நம்பப்படும் குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு மாத கால உளவுத் தகவல் மற்றும் ரகசியக் கண்காணிப்பிற்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளதாக குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷாபான் தெரிவித்தார். இச்சோதனை நடவடிக்கைகள் பேராக் மாநிலத்தில் ஆறு இடங்களிலும், மலாக்கா மற்றும் ஜொகூரில் தலா இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டன.

32 முதல் 61 வயதுக்குட்பட்ட நான்கு உள்ளூர் ஆண்கள், இரண்டு உள்ளூர் பெண்கள் மற்றும் கும்பலைச் சேர்ந்த ஒரு உள்ளூர் நபர் என மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் ஒரு குடிநுழைவுத் துறை அதிகாரியும் பிடிபட்டார். இதில் நான்கு பிறப்புச் சான்றிதழ்கள், ஒரு மலேசிய கடப்பிதழ், எட்டு கைபேசிகள் மற்றும் 13 கடப்பிதழ் விண்ணப்பப் படிவங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.