கல்வித் திட்டங்களுக்காக சிலாங்கூர் அரசு RM146 மில்லியன் ஒதுக்கீடு

14 ஜனவரி 2026, 9:42 AM
கல்வித் திட்டங்களுக்காக சிலாங்கூர் அரசு RM146 மில்லியன் ஒதுக்கீடு

கிள்ளான், ஜனவரி 14: சமுதாயம் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காகத் பயனுள்ள கல்வித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகச் சிலாங்கூர் மாநில அரசு 146 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது.

கல்வி சாதனை, சிந்திக்கும் திறன், மனநலம் மற்றும் சமூக உறவுகளுக்கு இடையே சமநிலையை உருவாக்குவதற்காகப் பல்வேறு ஆளுமை மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

"கல்வி அமைச்சின் 150 ரிங்கிட் ஆரம்பப்பள்ளி உதவித்தொகை மற்றும் மாநில அரசு செயல்படுத்தும் இதர திட்டங்கள், குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் என்றும், வறுமையின் காரணமாக எந்தவொரு மாணவரும் கல்வி முறையிலிருந்து விடுபடாமல் இருப்பதை உறுதி செய்யும் என்றும் நம்பப்படுகிறது. "இந்த முயற்சி கல்விச் சீர்திருத்தத்தின் இலக்குகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது, இது சமூக நீதி, நாட்டின் செல்வத்தைச் சமமாகப் பகிர்ந்தளித்தல் மற்றும் நீதியான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதை வலியுறுத்துகிறது," என்று அவர் கூறினார்.

பின்னணி பாராமல் முன்பள்ளி முதல் உயர்கல்வி வரை அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வழங்கப்படுவதையும், இதன் மூலம் கல்வி பெறுவதில் யாரும் ஒதுக்கப்படுவதில்லை என்பதையும் அவர் உறுதிபடக் கூறினார். கல்வி அமைச்சும் மாநில அரசும் வழங்கியுள்ள வாய்ப்புகளையும் வசதிகளையும் மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

"2026 சிலாங்கூர் வரவுசெலவுத் திட்டம் வரலாற்றில் முதன்முறையாக கல்வித் துறை மற்ற துறைகளை விட அதிக ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 55 மில்லியன் ரிங்கிட் அதிகரிப்பாகும். "கல்வி எனும் உறுதியான அடித்தளத்தின் மூலமே இந்த மாநிலத்தை மேம்படுத்த முடியும் என்று நான் நம்புவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது," என்று அவர் மேலும் கூறினார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.