மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மரணம்: மோதிவிட்டு தப்பிச் சென்ற நபரை போலீசார் தேடுகின்றனர்

14 ஜனவரி 2026, 2:01 AM
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மரணம்: மோதிவிட்டு தப்பிச் சென்ற நபரை போலீசார் தேடுகின்றனர்

ஷா ஆலம், 14 ஜனவரி: நேற்று உலு சிலாங்கூர், பத்தாங் காலி, ஜாலான் சுங்கை மாசின் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரின் உயிரிழப்பிற்கு காரணமான வாகன ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.

காலை 8.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும், இதில் வீட்டு விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றிய 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகவும் உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைமை உதவி ஆணையர் இப்ராகிம் ஹுசின் தெரிவித்தார்.

கெந்திங் ஹைலண்ட்ஸிலிருந்து பத்தாங் காலி நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர், எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனத்தால் மோதப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. "இந்த விபத்தின் காரணமாக, பாதிக்கப்பட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்," என்று அவர் பெரித்தா ஹரியான் செய்தியிடம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோலா குபு பாரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்தில் தொடர்புடைய வாகனத்தைக் கண்டறிய போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், போக்குவரத்து விசாரணை அதிகாரி 03-6064 1222 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்திலோ தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.