புதிய  ஜையண் பாண்டா கரடி ஜோடி, சிலாங்கூரின் சுற்றுலா ஈர்ப்பை அதிகரிக்கிறது

11 ஜனவரி 2026, 5:04 AM
புதிய  ஜையண் பாண்டா கரடி ஜோடி, சிலாங்கூரின் சுற்றுலா ஈர்ப்பை அதிகரிக்கிறது
புதிய  ஜையண் பாண்டா கரடி ஜோடி, சிலாங்கூரின் சுற்றுலா ஈர்ப்பை அதிகரிக்கிறது

ஷா ஆலாம், ஜனவரி 10 — சிலாங்கூர், சீனாவில் இருந்து வந்த புதிய ஜையண் பாண்டா கரடி ஜோடி சென் சிங் (ஆண்) மற்றும் சியாவ் யூ (பெண்) ஆகியோரின் வரவு, சர்வதேச தொடர் உறவு  முயற்சிகளை  முன்னெடுப்பதற்காக பெருமைப்படுகிறது.

முதல்வர் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியதாவது, இந்த பாண்டா ஜோடி வருகை, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை (Perhilitan) மற்றும் சீன வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் (CWCA) ஆகியோரின் கூட்டுறவில் சாத்தியமாகியுள்ளது. இது மாநிலத்தின் சுற்றுலா துறையை, குறிப்பாக 2026 மலேசியா வருகை ஆண்டினை, ஊக்குவிக்கும்.

“சென் சிங் மற்றும் சியாவ் யூ, சூ நெகாராவை  பிரபலப்படுத்துவதற்காக மட்டுமல்ல; மலேசியா மற்றும் சீனக் குடியரசின் 50 ஆண்டு வரலாற்று உறவை பிரதிபலிக்கும் அடையாளமாகவும் இருக்கின்றது.

“சிலாங்கூர் தொடர்ச்சியாக சர்வதேச முக்கிய சங்கமத்துக்கு  இடமளிக்கும் மாநிலமாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்,” என்று டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி தனது Facebook பக்கத்தில் கூறினார்.

இன்று காலை, அவர் பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுடன் சேர்ந்து ஜையண்ட் பாண்டா பாதுகாப்பு மையம், சூ நெகாராவுக்கு சென்று சென் சிங் மற்றும் சியாவ் யூ ஆகியோரின் அதிகாரப்பூர்வ அறிமுகத்தை காணச் சென்றார்.

அந்த விழாவில், பிரதமர் அன்வார் சூ நெகாராவுக்கான பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுக்கு   5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.