பாரிஸிலிருந்து புறப்பட்ட MH21 விமானம் அவசர நிலையை அறிவித்தது

8 ஜனவரி 2026, 2:33 AM
பாரிஸிலிருந்து புறப்பட்ட MH21 விமானம் அவசர நிலையை அறிவித்தது

ஷா ஆலம், ஜன 8: நேற்று பாரிஸில் உள்ள சார்லஸ் டி கோலே விமான நிலையத்திலிருந்து (CDG) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானி அவசரநிலையை அறிவித்தார்.

பனிப்பொழிவு காரணமாக, விமான நிலையத்திலிருந்து MH21 என்ற ஏர்பஸ் A350 விமானம், உள்ளூர் நேரப்படி காலை 11.55 மணிக்கு (CET) புறப்பட்டது.

9M-MAB என்ற பதிவு எண் கொண்ட விமானம், ஓடுபாதை 27L இலிருந்து புறப்பட்டு, மத்திய பிரெஞ்சு வான்வெளியில் இருந்தபோது, அவசரநிலை (squawk code 7700) அறிவிக்கப்பட்டது என்று ஹரியன் மெட்ரோ செய்தி வெளியிட்டது.

விமான கண்காணிப்பு வலைத்தளமான flightaware.com இன் அடிப்படையில், விமானம் CDGயில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.36 மணிக்கு மீண்டும் பாதுகாப்பாக தரையிறங்கியது.

இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை மற்றும் இச்சம்பவத்திற்கான காரணம் விமானத்தின் வழிகாட்டுதல் அமைப்பில் ஏற்பட்ட பிரச்சனை என்று நம்பப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.