மரண சகாய நிதி திட்டத்தின் (KDE) கீழ் 4,049 உரிமைகோரல்கள் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளன

7 ஜனவரி 2026, 4:31 AM
மரண சகாய நிதி திட்டத்தின் (KDE) கீழ் 4,049 உரிமைகோரல்கள் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளன

ஷா ஆலம், ஜன 7: மரண சகாய நிதி திட்டத்தின் (KDE) கீழ் கடந்த டிசம்பர் 2025 வரை இறந்தவர்களின் வாரிசுகளுக்கு RM4.049 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் நலனைப் பாதுகாப்பதில் சிலாங்கூர் அதன் பங்கை தொடர்ந்து நிரூபித்து வருகிறது என்பது தெரிகிறது.

இந்தத் திட்டத்தில் 186,681 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 4,049 உரிமைகோரல்கள் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளன என சிலாங்கூர் யாவாஸ் தெரிவித்துள்ளது.

கடினமான காலங்களை எதிர்கொள்ளும் வாரிசுகளுக்கு, குறிப்பாக அன்புக்குரியவரை இழந்த பிறகு செலவுகளை நிர்வகிப்பதில் இந்த உதவி நிவாரணம் அளிக்கிறது.

"சிலாங்கூர் மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வுக்காக இந்த உறுதிப்பாடு தொடர்ந்து வலுப்படுத்தப்படும்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20,000 பெறுநர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்தை வெற்றிகரமாக மாற்ற சிலாங்கூர் பட்ஜெட் 2025இல் மாநில அரசு RM20 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

முன்னதாக, SMUE மூலம் வழங்கப்படும் முதியோர் இறப்பு உதவித்தொகை மே 2019இல் நிறுத்தப்பட்டது. ஆனால் 2021இல் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட பயனாளிகள் RM500 பெற முடியும்.

மேம்படுத்தப்பட்ட KDE திட்டம் இப்போது சிலாங்கூர் மக்களின் நலனை நிலைநிறுத்துவதற்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு ஏற்ப, இலக்கு குழுவிற்கு அதிக இழப்பீட்டை வழங்குகிறது.

புதிய விண்ணப்பங்கள் அல்லது தகவல் புதுப்பிப்புகளை kde.yawas.com.my போர்டல் வழியாக இணையத்தில் மேற்கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.