அக்சியாடா அரீனாவில் கூரை கசிவு பிரச்சினை மீண்டும் நிகழாது  என்கிறது  பி.எஸ். எம்

3 ஜனவரி 2026, 1:08 PM
அக்சியாடா அரீனாவில் கூரை கசிவு பிரச்சினை மீண்டும் நிகழாது  என்கிறது  பி.எஸ். எம்

கோலாலம்பூர், 3 ஜன: மலேசிய விளையாட்டு அரங்க நிர்வாக  நிறுவனமான பெர்பாடனான் ஸ்டேடியம் மலேசியா (PSM), அக்சியாடா அரீனா அரங்கில், புக்கிட் ஜாலிலில் மலேசியா ஓப்பன் மற்றும் மலேசியா மாஸ்டர்ஸ் போட்டிகளின் போது ஏற்பட்ட கூரை கசிவு அல்லது நீர் துளி பிரச்சனை இந்த ஆண்டு மீண்டும் நிகழாது என்று உறுதியளித்துள்ளது.

PSM தலைமை நிர்வாக அதிகாரி இலியாஸ் ஜமில் கூறுகையில், அந்த இடத்தில் பழைய கூரையை மாற்றும் பணி முழுமையாக முடிந்துவிட்டது. அடுத்த செவ்வாய்க்கிழமை நடைபெறும் மலேசியா ஓப்பன் 2026 போட்டிக்கு முன்பு பல சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

“கூரை சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டன. கடந்த ஆண்டு மாஸ்டர்ஸ் மலேசியாவின் போது ஏற்பட்டது கண்டென்சேஷன் நீர் துளி தேக்க பிரச்சினை காரணமாக  ஏற்பட்ட இடையூறுகள் மீண்டும் நிகழாதிருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சோதனை செய்தோம். இந்த ஆண்டு அதே பிரச்சனை நிகழாது என்று எதிர்பார்க்கிறோம்” என்று அவர் சமீபத்தில் பெர்னாமா தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, மலேசியா ஓப்பன் 2025 முதல் சுற்றுப் போட்டியின் போது அக்சியாடா அரீனாவின் கூரை கசிந்து நீர் துளிகள் உள்ளே விழுந்தது. இதனால் சில போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதே பிரச்சனை மாஸ்டர்ஸ் மலேசியாவின் போதும் ஏற்பட்டது. ஆனால் இம்முறை கூரை கசிவு காரணமாக அல்ல, குளிர்சாதன நீர் துளி தேக்க கசிவு பிரச்சனையால் என்றது. 

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.