சுகாதாரக் கிளினிக்குகளில் வாக்-இன் நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்படும்

2 ஜனவரி 2026, 3:10 AM
சுகாதாரக் கிளினிக்குகளில் வாக்-இன் நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்படும்

ஷா ஆலம், ஜன 1: சுகாதாரக் கிளினிக்குகளில் இனி வாக்-இன் நோயாளிகளை ஏற்றுக்கொள்வதில்லை என்று சமூக ஊடகங்களில் பரவும் கூற்றுகள் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் அவை சமூகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார அமைச்சகம் (MOH) வலியுறுத்தியுள்ளது.

சிகிச்சையை வழங்குவதற்கான முன் பதிவே முக்கிய முறை என்றாலும், வாக்-இன் சேவைகள் இன்னும் அவசரகால சம்பவங்களுக்கு, முதியவர்கள் மற்றும் தொழில்நுட்ப அணுகல் கட்டுப்பாடுகள் உள்ள நபர்களுக்கு.

வழங்கப்படுகின்றன.

முன்பதிவு இல்லாத நோயாளிகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், சிகிச்சை முன்னுரிமையின் அளவை தீர்மானிக்க ஆரம்ப மதிப்பீட்டு செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.

"முன் பதிவு செய்த நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட நேரத்தின் போது முன்னுரிமை வழங்கப்படும்" என்றும் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தினரிடையே தொழில்நுட்பத்தை அணுகும் முறையில் உள்ள வேறுபாடுகளை சுகாதார அமைச்சகம் புரிந்துகொள்கிறது. எனவே அனைத்து மக்களும் சமமான அணுகலைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் வாக்-இன் சேவை தொடர்ந்து வழங்கப்படும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.