ஷா ஆலம், 1 ஜனவரி பொது பயன்பாட்டிற்கு, குறிப்பாக இளைஞர்களிடையே, மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான வசதிகளை உறுதி செய்வதற்காக ஸ்ரீ செர்டாங் மாநில சட்டமன்றத்தில் (டுன்) பல பொது விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் இந்த ஆண்டு கவனம் செலுத்தும் என இந் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் சலீமி ஆஸ்மி, வெளிப்புற பேட்மிண்டன் மைதான வசதிகளை மேம்படுத்துவதிலும் முக்கிய கவனம் செலுத்தியதாக கூறினார்,
தற்போதைய விளையாட்டு போக்குகளுக்கு ஏற்ப பிக்ல்பால் மைதானம் மாற்றப்படும், மேலும் தற்போதுள்ள வசதிகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் என்ற அவர், இங்குள்ள தாமான் பெர்மையில் ஒரு ஃபுட்சல் மைதானத்தை RM40,000 பட்ஜெட்டில் கட்ட தயாராக உள்ளதாகவும், மேலும் பல கால்பந்து மற்றும் ஃபுட்சல் மைதானங்கள் மேம்படுதத வேண்டிய பணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
"கூடுதலாக, ஸ்ரீ செர்டாங் ஸ்கேட் போர்டு பூங்காவில் பழுது பார்க்கும் பணிகள் சுபாங் ஜெயா நகர சபை (எம். பி. எஸ். ஜே) கவுன்சில் உறுப்பினர்களால் விரைவில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படுகிறது" என்று அவர் மீடியா சிலாங்கூருக்கு தெரிவித்தார்.
இதற்கிடையில், 2026 மலேசிய விளையாட்டுப் போட்டிகளை (சுக்மா) சிலாங்கூர் தொகுப்பாளராக கொண்டு ஏற்பாடு செய்தது, தனது பகுதியில் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களை வகுப்பதில் முழுமையாக பயன் படுத்தப்பட்டது என்று அப்பாஸ் கூறினார்.
சுக்மா 2026 க்கான சிலாங்கூர் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அவர், இரு வருட விளையாட்டு நிகழ்வின் உணர்வையும் 'அதிர்வுகளையும்' அடிமட்ட நிலைக்கு, குறிப்பாக ஸ்ரீ செர்டாங்கில் கொண்டு வருவதற்கு இந்த அணுகுமுறை எடுக்கப் பட்டதாக தெரிவித்தார். இந்த ஆண்டு எனது முன்னுரிமை இளைஞர்கள்தான். சுக்மா 2026 லிருந்து உத்வேகம் பெற்று, செர்டாங் மாநில தொகுதியில் உள்ள இளைஞர்களுக்காக முக்கிய விளையாட்டுகளாக இருந்தாலும் இல்லா விட்டாலும், விளையாட்டுத் திட்டங்களின் அமைப்பை அதிகரிப்போம் என்றார்.
"ஸ்ரீ செர்டாங் கபடி போட்டிக்கான இடமாகும், இது உள்ளூர் சமூகத்திற்கு இந்த மதிப்புமிக்க விளையாட்டு போட்டியின் உற்சாகத்தை நேரடியாக அனுபவிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது", என்று அவர் மேலும் கூறினார்.
இந்த ஆண்டின் எதிர்பார்ப்புகளைப் பொறுத்தவரை, டத்தோ மந்திரி புசார் டத்தோ' ஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் நல்லாட்சியின் அடிப்படையில் சிலாங்கூர் மாநில அரசு தனது நிர்வாக சிறப்பை பராமரிக்க வேண்டும் என்று அப்பாஸ் விரும்புகிறார்.
தற்போதைய நிச்சயமற்ற வாழ்க்கைச் செலவு நிலைமையைத் தொடர்ந்து பொது நலனில் கவனம் செலுத்தும் திட்டங்களை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். "சிலாங்கூர் மாநில அரசு எப்போதும் மக்களுக்கு உதவ ஒரு அணுகு முறையை எடுத்துக் கொள்கிறது, மேலும் சமூகத்தின் நலனுக்காக அதிக அக்கறையுள்ள முயற்சிகளைத் தொடர முடியும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.


