ஷா ஆலம், 1 ஜன: யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிம் மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் ராஜா ஜாரித் சோஃபியா, அனைத்து மக்களுக்கும் 2026 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.அவர்கள் ஃபேஸ்புக் பதிவில் , செரி படுகா பாகிண்டா இருவரும், இந்த புத்தாண்டு நாட்டுக்கு செழிப்பு, வளம் மற்றும் தொடர்ச்சியான ஆசீர்வாதங்களை கொண்டுவரட்டும் என்று வேண்டுகின்றனர்.அதேநேரம், சுல்தான் இப்ராஹிம் மக்களை தொடர்ந்து ஒற்றுமையை வலுப் படுத்தவும், ஒருவரையொருவர் மதிக்கவும், பல இன சமூகத்தில் இணக்கத்தை பேணவும் அழைப்பு விடுக்கிறார். இது மலேசியாவின் ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு ஆஸ்திவாரம் என்றனர்.“செரி படுகா பாகிண்டா மலேசியா எப்போதும் இறைவனால் SWT-யால் பாதுகாக்கப்பட்டு, அமைதி, முன்னேற்றம் மற்றும் நீடித்த செழிப்பு வழங்கப்படவும் வேண்டுகின்றனர்” என்று அந்த பதிவு தெரிவிக்கிறது.
யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிம் மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங்கின் புத்தாண்டு வாழ்த்துகள்
1 ஜனவரி 2026, 3:08 AM


