சிலாங்கூர் மாநில மக்களுக்கு 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துகள்- மேன்மை தங்கிய சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் வாழ்த்து

29 டிசம்பர் 2025, 9:16 AM
சிலாங்கூர் மாநில மக்களுக்கு 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துகள்- மேன்மை தங்கிய சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் வாழ்த்து

ஷா ஆலாம், டிச 29- மலரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில மக்களின் நல்வாழ்வுக்கு சுபிட்சத்திற்கு வழிவகுக்கட்டும். இனம், மதம் பேதமின்றி மாநில வாழ் மக்கள் அனைவருக்கும் எங்களின் இனிய 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துகள் என்று சிலாங்கூர் மாநில ஆட்சியாளர், மேன்மை தங்கிய சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா, மற்றும் தெங்கு பெர்மைசூரி ஹாஜா நோராஷிகின் வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டுள்ளனர்.


அரசியல்வாதிகள் அரசியல் பேசாமல், மாநில மக்களுக்கு கடமையாற்ற வேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாகவும். மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க கவனம் செலுத்துங்கள், ஏனெனில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

உண்மையான மேம்பாட்டுப் பணிகளை உருவாக்குவதில் அனைத்து ஆற்றலையும் சிந்தனையையும் செலுத்துங்கள், இதனால் மக்கள் மேலும் வசதியாக வாழவும், அவர்களின் நலன்கள் பாதுகாக்கப் படவும், நியாயமான மற்றும் பயனுள்ள அமைப்பால் பாதுகாக்கப் படுவதாகவும் உணரவும் முடியும் என்று சுல்தான் ஷாராஃபுடின் கேட்டுக்கொண்டார்.

நோக்கம் தூய்மையாகவும், முயற்சி உண்மையானதாகவும் இருந்தால் எதுவும் சாத்தியமற்றது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனைத்து திட்டமிடல்களும் நடவடிக்கைகளும் மக்களின் செழிப்பையும் மாநிலத்தின் ஸ்திரத் தன்மையையும் முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

நீண்ட காலமாகத் தொடரும் ஒரு விஷயத்தையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். வெள்ளப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காணப்பட வேண்டும், 'பூஜ்ஜிய வெள்ளம்' என்ற தெளிவான இலக்குடன். உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ சிறந்த நிபுணத்துவத்தை தேடுங்கள். அறிவு, தொழில்நுட்பம் மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்துங்கள். இனி மேலும் சாக்குப் போக்குகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளாதீர்கள், ஏனெனில் திட்டமிடல் தோல்வியின் காரணமாக மக்கள் படும் துயரத்தை விலையாகக் கொடுக்க முடியாது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

புயல், சூறாவளி, கனமழை அல்லது இறைவனின் கட்டளையான இயற்கை சீற்றங்களைத் தடுக்க முடியாது என்பதை நான் அறிவேன். இருப்பினும், ஒரு நல்ல அமைப்பு, நீண்டகால திட்டமிடல் மற்றும் நேர்மையான, ஒழுக்கமான செயல்படுத்தல் இருந்தால் வெள்ளத்தை சமாளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

இறுதியாக, 2026 ஆம் ஆண்டு எனது மக்களுக்கு மேலும் செழிப்பைக் கொண்டு வரும் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.

இந்த புதிய ஆண்டை சிறந்த மனிதர்களாகவும், அதிக ஒழுக்கம் உள்ளவர்களாகவும், குடும்பம், சமூகம் மற்றும் மாநிலத்திற்கு மேலும் பயனுள்ளவர்களாகவும் மாறுவதற்கான ஒரு தீர்மானப் புள்ளியாக ஆக்குங்கள் என்று தமது 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கேட்டுக்கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.