பொது சாலைகளில் கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீது நடவடிக்கை

29 டிசம்பர் 2025, 9:15 AM
பொது சாலைகளில் கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீது நடவடிக்கை

அம்பாங் ஜெயா, டிச 29: கடந்த புதன்கிழமை அதன் நிர்வாகப் பகுதியைச் சுற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் பொது இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த கைவிடப்பட்ட ஏழு மோட்டார் சைக்கிள்கள் மீது அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) நடவடிக்கை எடுத்தது.

பொது சாலைகளில் கைவிடப்பட்ட வாகனங்களால் பாதுகாப்பு, தூய்மை மற்றும் பயனர் அணுகல் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று எம்பிஏஜே முகநூலில் தெரிவித்துள்ளது.

"பொது இடங்களில் கைவிடப்பட்ட வாகனங்கள் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும், அமைதியை சீர்குலைக்கும் மற்றும் நகர்ப்புற சூழலின் அழகைக் கெடுக்கும் தன்மை கொண்டுள்ளன.

"இது சம்பந்தமாக, திட்டமிடப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த முறையில் அமலாக்க நடவடிக்கைகள் தொடரும் என்று சம்பந்தப்பட்ட நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரங்கள் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் எம்பிஏஜே பொது புகார் மேலாண்மை அமைப்பு (SISPAA) மூலம் அனுப்பலாம் அல்லது 1-800-22-8100 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.