கம்போங் லக்சமணா சமூக மண்டபம் மேம்படுத்தப்பட்டது

29 டிசம்பர் 2025, 3:09 AM
கம்போங் லக்சமணா சமூக மண்டபம் மேம்படுத்தப்பட்டது

கோம்பாக், டிச 29 — உள்ளூர் சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்படும் நடவடிக்கைகளுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான வசதிகளை உறுதி செய்வதற்காக, சிலாங்கூர் அரசாங்கம் மாநிலத்தில் உள்ள சமூக மண்டபங்களை மேம்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளது.

கம்போங் லக்சமணா சமூக மண்டபம் செயல்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு மேம்படுத்தப்பட்டதிலிருந்து இந்த உறுதிப்பாடு தெளிவாகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“இந்த மண்டபம் வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர்வாசிகளின் பயன்பாட்டிற்கு மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.”

"இந்த மண்டபம் மிகவும் முக்கியமான பொது வசதிகளில் ஒன்றாகும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள இது மேம்படுத்தப்பட்டுள்ளது," என்று அவர் அம்மண்டபத்தை அதிகாரப்பூர்வமாக திறந்த வைத்த பிறகு கூறினார்.

இந்த திட்டம் கோம்பாக் நாடாளுமன்ற அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவின் (ICU) கீழ் செயல்படுத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அக்கிராமத்தில் வெள்ளப்பெருக்கு பிரச்சனையை மாநில அரசு தீவிரமாகக் கருதுகிறது மற்றும் விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அமிருடின் உறுதியளித்தார்.

இதற்கிடையில், இந்த சமூக மண்டபம் கிராமத்திற்கு ஒரு முக்கிய செயல்பாட்டு மையமாக அமைகிறது. அனைத்து இனங்கள் மற்றும் மக்களையும் ஒன்றிணைக்கிறது என கம்போங் லக்சமாணா தலைவர் ரோஸ்ஸைடி இஷாக் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.