குண்டுவெடிப்பு சம்பவ சந்தேகநபர் கைது, மேலும் வெடிகளை போலீஸ் அழித்தது

28 டிசம்பர் 2025, 3:27 AM
குண்டுவெடிப்பு சம்பவ சந்தேகநபர் கைது, மேலும் வெடிகளை போலீஸ் அழித்தது

சிரம்பான் .டிசம்பர் 28: இங்குள்ள  டேசா பால்மா நீலாய் பகுதியில் டிசம்பர் 22 ஆம் தேதி மேம்பட்ட வெடிக்கும் கருவி (ஐ. இ. டி) வெடித்த சம்பவத்தில் சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர்.நேற்று பிற்பகல்  பத்தாங் பெனாரைச் சுற்றியுள்ள சாலையில் கைது செய்யப்பட்ட 62 வயதான சந்தேக நபரிடம் ஐ. இ. டி என்று சந்தேகிக்கப்படும் பல பொருள்களையும் போலீசார் கண்டுபிடித்ததாக நெகிரி மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமது தெரிவித்தார்.

மாலை 4:15 மணிக்கு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவரின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரது முகம், உடல், கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்கள் இருப்பது தெரியவந்தது."அவர் தடுத்து வைக்கப்பட்டபின், சிகிச்சைக்காக துங்கு ஜாஃபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அவர் பலவீனமாக இருந்ததாக"  அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

பொது மக்கள் ஊக அடிப்படையில்  வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், காவல்துறையினருக்கு தகவல்களை வழங்கி தொடர்ந்து  ஒத்துழைக்குமாறு  கேட்டுக் கொண்டார். 

அதே நேரத்தில் சந்தேக நபரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் சமூகத்தின் ஒத்துழைப்புக்கும் பாராட்டு தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், நீலாயில் உள்ள பாடாங் பெனார் பகுதியைச் சுற்றியுள்ள சாலையில் அந்த நபர் கைது செய்யப்பட்டதை அல்சாஃப்னி இன்று பிற்பகல் உறுதிப்படுத்தினார்.

நேற்று, அல்சாஃப்னி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 'அயாங்' என்று அழைக்கப்படும் சந்தேக நபருக்கு அந்த நபரின் வாடகை வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சாதனங்கள் மற்றும் உபகரணங்களின் கண்டுபிடிப்பின் அடிப்படையில் வெடிபொருள் உற்பத்தியில் தொழில்நுட்ப அறிவு மற்றும் குறிப்பிட்ட திறன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது என்றார்.

கடந்த திங்கட்கிழமை, காலை 7:08 மணிக்கு அப்பகுதியில்  ஒரு பொருள் வெடித்ததாகவும் அங்கே ஆணிகள்  சிதறிக் கிடந்ததாகவும் பொதுமக்களிடம்  இருந்து  ஒரு  புகாரைப் பெற்ற பின்னர்.  பால்மா கிராமப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான  ஐ. இ. டி. யைக் கண்டு பிடித்ததாகவும் அவர் கூறினார்.

அவரது வீட்டில் மேலும் 31 ஐ. இ. டி. களைக் கண்டுபிடித்த போலீசார், அனைத்து வெடி பொருட்களையும் அழித்துள்ளனர். 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.