சியோல், டிச 26 – கடந்த புதன்கிழமை மூன்று கால்நடை பண்ணைகளில் மூன்று புதிய உயர் பாதிப்புத் தன்மை கொண்ட பறவைக் காய்ச்சல் (HPAI) சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்த பருவத்திற்கான மொத்த சம்பவ எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய பேரிடர் மேலாண்மை தலைமையகம் தெரிவித்ததன்படி, இந்த சம்பவங்கள் சியோலிலிருந்து சுமார் 65 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள அன்சியோங் பகுதியில் உள்ள ஒரு கோழிப் பண்ணை, தென் மேற்கு பகுதியில் உள்ள கோச்சாங் மாவட்டத்திலுள்ள ஒரு வாத்துப் பண்ணை, மேலும் அதே தென் மேற்கு பகுதியில் உள்ள நாஜு நகரிலுள்ள இன்னொரு வாத்துப் பண்ணை ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன.
அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பண்ணைகளுக்கு நுழைவதைத் தடை செய்ததுடன், கால்நடைகளை அழிக்கும் (pelupusan) பணிகளையும் நோய் பரவல் தொடர்பான விசாரணைகளையும் தொடங்கியுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பண்ணை செயல்பாடுகள் மற்றும் வேளாண் வாகனங்களுக்கு தற்காலிக நிறுத்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இரண்டு வாத்துப் பண்ணைகளுடன் தொடர்புடைய பிற வாத்துப் பண்ணைகள், அதேபோல் கோச்சாங் மாவட்டம் அமைந்துள்ள வடக்கு ஜியோல்லா மாகாணத்தில் உள்ள
அனைத்து வாத்துப் பண்ணைகளிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கூடுதல் சம்பவங்கள் ஏற்படும் அதிக சாத்தியக்கூறு உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள அன்சியோங் மற்றும் சியோனான் நகரங்களுக்கு வேளாண் அமைச்சக அதிகாரிகள் அனுப்பப்படவுள்ளனர்.


