சரவாக் மக்களின் நலனை மேம்படுத்த மடாணி அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தகவல்

26 டிசம்பர் 2025, 5:48 AM
சரவாக் மக்களின் நலனை மேம்படுத்த மடாணி அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தகவல்

கோலாலம்பூர், டிச 26- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சரவாக் மக்களின் நலனை மேம்படுத்துவதற்கு மடாணி அரசாங்கம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது. இது மூலோபாய முதலீடுகள், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மேம்பாடு மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் சாத்தியமாகும் என்று தெரிவித்தார்.

மலேசிய ஒப்பந்தம் 1963 (MA63) அமலாக்கம் மற்றும் எண்ணெய் வளங்களின் நியாயமான மேலாண்மை ஆகியவை இந்த உறுதிப்பாட்டில் அடங்கும். இதன் மூலம் பொருளாதாரப் பலன்கள் மக்களைத் தொடர்ந்து சென்றடைவதை உறுதிசெய்ய முடியும் என்று அவர் கூறினார்.

"இன்றைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக, சரவாக்கை மேலும் மேம்பட்ட, நிலையான மற்றும் வளமான மாநிலமாக உருவாக்குவதற்காக ஒவ்வொரு முயற்சியும் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. சரவாக் மக்களுக்கான உண்மையான மாற்றம் நிகழ்ந்து வருகிறது, நாம் அனைவரும் இந்தப் பயணத்தின் ஒரு அங்கம்," என்று அன்வார் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

சரவாக்கின் பசுமை எரிசக்தி பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. RM184 மில்லியன் மதிப்பிலான மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படுவதுடன், ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பாவிலிருந்து பசுமை ஹைட்ரஜன் துறையில் முதலீடுகள் வந்துள்ளன.

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில், பெட்ரோலியம் சரவாக் பெர்ஹாட் (PETROS) நிறுவனத்தின் பங்கு பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (PETRONAS) நிறுவனத்துடன் மூலோபாய ஒத்துழைப்பு மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இது புதிய ஆய்வுப் பகுதிகள், எரிவாயு மேம்பாடு மற்றும் மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க தெளிவான வருவாய் பகிர்வுக்கான வாய்ப்புகளைத் திறக்கிறது.

சரவாக்கின் பசுமை ஹைட்ரஜன் திட்டம் ஆசியாவின் முன்னோடியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தை மலேசியாவின் எதிர்கால எரிசக்தி சக்தியாக மாற்றுகிறது.

மூலோபாய முதலீடுகள் மற்றும் உயர் தாக்கத் தொழில் மேம்பாடு ஆகியவை சரவாக் மக்களுக்கு பசுமை எரிசக்தி, குறைக்கடத்திகள், மின்சாரம் மற்றும் மின்னணுவியல், மெத்தனால் மற்றும் ஹைட்ரஜன் மையங்கள், அத்துடன் கூச்சிங்-பிந்துலு-மீரி வழித்தடத்தில் தளவாடங்கள் மற்றும் விண்வெளித் துறைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல வேலை வாய்ப்புகளையும் திறன்களையும் உருவாக்குகின்றன என்று அன்வார் மேலும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.