ஷா ஆலம், 24 டிசம்பர்: சிலாங்கூர் மாநிலம் ஆண்டொன்றுக்கு 178,641 மெட்ரிக் டன் தேங்காய் உற்பத்தி செய்து, RM282.5 மில்லியன் விற்பனை மதிப்புடன் நாட்டிலேயே அதிக பட்சமாகப் பதிவு செய்துள்ளது என்று 2024 விவசாய கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது.
தேசிய புள்ளியியல் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் கூறுகையில், சிலாங்கூரின் தேங்காய் பயிரிடப் பட்ட பரப்பளவு 12,143 ஹெக்டேர் ஆகும். இது நாட்டில் இரண்டாவது அதிக பட்சம் – ஜோகூர் 14,225 ஹெக்டர் கொண்டு முதலிடத்தில் உள்ளது.
“ஜோகூர் அதிக பரப்பளவு கொண்டிருந்தாலும், சிலாங்கூரின் தேங்காய் உற்பத்தி அதிகம் – 178,641 மெட்ரிக் டன். ஜோகூர் வெறும் 132,268 மெட்ரிக் டன் மட்டுமே.
மேலும், சிலாங்கூரின் தேங்காய் விற்பனை மதிப்பு நாட்டிலேயே அதிகம் – RM282.5 மில்லியன். ஜோகூர் RM 202.74 மில்லியன்” என்று அவர் நேற்று ஆன்லைனில் அறிக்கையை வெளியிடும் போது கூறினார்.
குறிப்பிடத்தக்கது, மலேசிய புள்ளியியல் துறை (DOSM) நாட்டின் நான்காவது விவசாய கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டது. இதற்கு முந்தையது 2005-இல் நடத்தப்பட்டது.
தேசிய புள்ளியியல் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின், 2026 பொருளாதார கணக்கெடுப்பு தொடர்பான ஈடுபாட்டு அமர்வுக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசுகையில் (நவம்பர் 11, 2025, கிள்ளானில் உள்ள ஹோட்டல் பிரீமியர்). புகைப்படம்: ரெமி அரிஃபின் / மீடியா செலாங்கூர்
இதற்கிடையில், டாக்டர் முகமட் உசிர் கூறுகையில், சிலாங்கூரில் மூன்று மாவட்டங்கள் விவசாயத்தில் சுறுசுறுப்பாக உள்ளன: கோல சிலாங்கூர், சபாக் பெர்ணம் மற்றும் கோல லங்காட்.
சபாக் பெர்ணமில் சிலாங்கூரிலேயே அதிக தனிப்பட்ட விவசாய நில உரிமைகள் உள்ளன – 9,664. அதைத் தொடர்ந்து கோல சிலாங்கூர் (7,194) மற்றும் கோல லங்காட் 5,471.
“எனினும், விவசாய வருமானத்தில் கோலா சிலாங்கூர் முதலிடம் – RM1,841 மில்லியன். அதைத் தொடர்ந்து சபாக் பெர்ணம் (RM1,824 மில்லியன்) மற்றும் கோல லங்காட் RM1,465 மில்லியன்.
சிலாங்கூரின் மொத்த பயிரிடப் பட்ட பரப்பளவு 176,868 ஹெக்டேர் – இதில் 4,303 பயிர்ச்செய்கை, 2,628 கால்நடை வளர்ப்பு, 1,468 மீன்பிடித்தல் மற்றும் 273 நீர்வாழ் வளர்ப்பு ஆகியவை அடங்கும்” என்றார்.
சிலாங்கூர் 2026 பட்ஜெட் மூலம், மாநில அரசு உணவுப் பொருள் விநியோகப் பாதுகாப்பை வலுப்படுத்த RM4.85 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது.
மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில், அக்ரோ ஃபுட் பார்க் மேம்பாடு மற்றும் சாத்தியமுள்ள நிலங்களுக்கு RM9.5 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் அடிப்படை விவசாயத் தொழிலை வலுப்படுத்தும் என்றார்.
சிலாங்கூர் நாட்டிலேயே அதிகபட்ச தேங்காய் உற்பத்தி, விற்பனை மதிப்பைப் பதிவு செய்தது
25 டிசம்பர் 2025, 11:17 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
எரிபொருள் மானியம் செலவுகளைச் சமாளிக்கப் போதுமானதாக இல்லை - விவசாயச் சந்தை வியாபாரிகள்
Shalini Rajamogun
4 மே 2026

national
பூடி டீசல் மற்றும் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு - மடாணி அரசாங்கத்திற்குப் பாராட்டு
Shalini Rajamogun
16 ஏப்ரல் 2026

national
டீசல் மானிய உதவிதொகை RM400ஆக உயர்வு - அரசாங்கம்
Shalini Rajamogun
15 ஏப்ரல் 2026

selangor
சபாக் பெர்ணமில் புதிய வளர்ச்சி திட்டங்கள் 2026 பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்: அமிருடின்
Pakiya
9 நவம்பர் 2025

உங்கள் கருத்து என்ன?




