கோலாலம்பூர், 25 டிசம்பர்: போலீசார் கைது நடவடிக்கையின் போது அதிகாரிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் ஏற்பட்ட காயம் தொடர்பான வழக்கு – விசாரணை ஆவணங்கள் சிலாங்கூர் மாநில அரசு வழக்கறிஞர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டனபுக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் வெளியிட்ட அறிக்கையில், சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது என்றார்.
“2025 நவம்பர் 18 அன்று ஒரு பெண்மணியிடம் இருந்து போலீசார் புகார் பெற்றனர். அவரது மகன் கைது செய்யப்படும் போது அடிக்கப் பட்டதாகக் கூறப்பட்டது” என்று அவர் கூறினார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது – அதாவது வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல். போலீசார் விசாரணையில் முழு வெளிப் படைத்தன்மையையும் நேர்மையையும் உறுதி செய்வதில் உறுதியாக உள்ளனர் என்று குமார் வலியுறுத்தினார்.
நீதி உறுதி செய்யப்படும் என்பதற்காகவும், எந்தவொரு தவறான நடத்தையுடனும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றார்.நேற்று ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் படி, கடந்த மாதம் பந்திங்கில் உள்ள கம்போங் சுங்கை இங்காட் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் உள்ளூர் ஆணொருவர் போலீசார் என நம்பப்படும் நபர்களால் அடிக்கப் பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோலா லங்காட் மாவட்ட துணைக் காவல் தலைவர் டிஎஸ்பி முகமட் சுஃபியான் அமின் கூறுகையில், பாதிக்கப் பட்டவரின் தாயாரிடமிருந்து புகார் கிடைத்தது. அவர் 3 நிமிட சிசிடிவி காணொளியைப் பெற்றதாகவும், அதில் தனது மகன் தன்னை போலீசார் என அறிமுகப் படுத்திக்கொண்ட நபரால் அறைவதாகத் தெரிவதாகவும் கூறினார்.அந்தக் காணொளியின் படி, ஆதாரங்களைத் தேடும் நோக்கில் புகார்தாரரின் மகன் பலமுறை அறையப் பட்டதாகத் தெரிகிறது. புகார்தாரரின் கணவரும் இந்தச் சம்பவத்தை நேரில் கண்டதாகத் தெரிவித்தார்.


