அடுத்தாண்டு மொத்தம் 21,289 தவாஸ் உறுப்பினர்கள் RM1,500 பெறவுள்ளனர்

23 டிசம்பர் 2025, 10:46 AM
அடுத்தாண்டு மொத்தம் 21,289 தவாஸ் உறுப்பினர்கள் RM1,500 பெறவுள்ளனர்

ஷா ஆலம், டிச 23: அடுத்தாண்டு மொத்தம் 21,289 தவாஸ் உறுப்பினர்கள் RM1,500 (18 வயதை அடையும் போது) பெறவுள்ளனர். இது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் விநியோகிக்கப்படும்.

2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்த நன்மையைப் பெறும் முதல் தவாஸ் உறுப்பினர் குழு இவர்கள் என்று யாவாஸ் தலைமை நிர்வாக அதிகாரி கன் பெய் நெய் கூறினார்.

பெறுநரின் பிறந்த மாதத்தின்படி மார்ச் 2026 முதல் நான்கு கட்டங்களாக பணம் செலுத்தப்படும்.

"அவர்களின் பிறந்த மாதத்தின்படி நான்கு கட்டங்களாகப் பணம் செலுத்தத் தொடங்குவோம். அவர்களின் வங்கிக் கணக்கிற்கு (EFT) அல்லது மின்-பணப்பைக்கு பரிமாற்றம் மூலம் RM1,500 வழங்குவோம்.

"சமீபத்திய தரவுகளின்படி, உறுப்பினர்களில் 21,289 பேர் இந்த சேமிப்பைப் பெற தகுதியுடையவர்கள்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

முன்னதாக, தவாஸ் திட்டத்தை செயல்படுத்துவது இளைய தலைமுறையினரை மேம்படுத்துவதற்கும், ஒவ்வொரு சிலாங்கூர் குழந்தையும் வாழ்க்கையில் நிலையான தொடக்கத்தைப் பெறுவதை உறுதி செய்வதற்கும் மாநில அரசின் தொடர்ச்சியான முயற்சியை நிரூபித்ததாகக் டத்தோ மந்திரி புசார், டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.