ஆட்டைத் தாக்கிய பெரிய மலைப் பாம்பை ஏ பி எம் கோலா பிலா பிடித்தது

21 டிசம்பர் 2025, 9:47 AM
ஆட்டைத் தாக்கிய பெரிய மலைப் பாம்பை ஏ பி எம் கோலா பிலா பிடித்தது

 ஆட்டைத் தாக்கிய பெரிய மலைப் பாம்பை ஏ பி எம் கோலா பிலா பிடித்தது

ஷா ஆலம், 21 டிச: மலேசிய குடிமைப் பாதுகாப்புப் படை (ஏபிஎம்) கோலா பிலா, நேற்று கம்போங் பெட்டிங்கில் நடத்திய ஒரு நடவடிக்கையில் பெரிய மலைப் பாம்பை (ular sawa batik) வெற்றிகரமாகப் பிடித்தது.
கோலா பிலா மாவட்ட செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் (பிகேஓடி) தெரிவித்ததாவது, காலை சுமார் 6 மணியளவில் குடியிருப்பாளர் இடமிருந்து புகார் பெற்ற பிறகு மூன்று ஏபிஎம் உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர்."புகார்தாரரின்  கூற்றுப்படி, ஆட்டுக் கிடங்கின் மேல் பெரிய அளவிலான ஒரு  மலைப் பாம்பு சுருள் சுருளாகப் படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த காட்டு உயிரினம் ஒரு ஆட்டைத் தாக்கியிருந்தது, ஆனால் அதை விழுங்க முடியவில்லை" என்று அந்த அமைப்பு பேஸ்புக்கில் தெரிவித்தது.
லான்ஸ் கார்ப்பொரல் (பிஏ) முகமது இக்பால் ருஸ்லான் தலைமையிலான செயல்பாட்டில், மற்ற இரு உறுப்பினர்களுடன் சேர்ந்து அந்த காட்டு உயிரினத்தைப் பாதுகாப்பாகக் கட்டுப்படுத்தி பிடித்தனர்.
அந்தப் பாம்பு ஏற்கனவே அதே இடத்தில் பிடிக்கப் பட்டிருந்தது என்பதும், அதன் எடை சுமார் 120 கிலோ கிராம் என மதிப்பிடப்பட்டுள்ளது என்பதும் புரிந்துகொள்ளப்பட்டது.
மலைப் பாம்பு பின்னர் கோலா பிலா மாவட்ட செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக நடவடிக்கைக்காக வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறைக்கு (பெர்ஹிலிட்டான்) ஒப்படைக்கப்பட்டது.
அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.