சிலாங்கூர் உட்பட பல மாநிலங்களில் ஆபத்தான, கடுமையான மழை எச்சரிக்கை

17 டிசம்பர் 2025, 9:53 AM
சிலாங்கூர் உட்பட பல மாநிலங்களில்  ஆபத்தான, கடுமையான மழை எச்சரிக்கை

கோலாலம்பூர், டிசம்பர் 17 - பொதுமக்களுக்கு வெள்ளம் மற்றும் இடையூறு விளைவிக்கும் அபாயம் உள்ள நீடித்த கனமழை எதிர்பார்க்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெட்மலேசியா வெளியிட்டுள்ள தொடர் மழை எச்சரிக்கை விவரம்:

அபாய நிலை (அதிக ஆபத்து தொடர் மழை):

- பகாங் (குவாந்தான், பெக்கான், ரோம்பின்)

கடுமையான நிலை (வெள்ளம் மற்றும் இடையூறுக்கான சாத்தியம்):

- பகாங் (ஜெரண்டுட், மாரான், பெரா)

- திரங்கானு (டுங்குன், கெமாமான்)

- ஜொகூர் (சிகாமாட், குளுவாங், மெர்சிங், கோத்தா திங்கி)

எச்சரிக்கை நிலை (தொடர் மழை):

- கிளந்தான்

- திரங்கானு (பெசுட், செட்டியு, கோல நெரஸ், உலு திராங்கானு, கோல திராங்கானு, மாராங்)

- பகாங் (கேமரன் மலை, பெந்தோங், தெமர்லோ)

- சிலாங்கூர்

- கோலாலம்பூர்

- புத்ராஜெயா

- நெகிரி செம்பிலான்

- மலாக்கா

- ஜொகூர் (தங்காக், மூவார், பத்து பஹாட், கூலாய், ஜொகூர் பாரு)

மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், அதிகாரப்பூர்வ மெட்மலேசியா வலைத்தளம், அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் அல்லது 1-300-22-1638 என்ற எண்ணில் மெட்மலேசியாவை தொடர்பு கொள்ளவும் சமீபத்திய வானிலை தகவல்களைப் பெறுமாறு அறிவுறுத்துகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.