சுற்றுச்சூழலில் மாசுபாட்டை ஏற்படுத்தியதற்காக இரண்டு தொழிற்சாலைகளுக்கு அபராத விதிப்பு

17 டிசம்பர் 2025, 5:01 AM
சுற்றுச்சூழலில் மாசுபாட்டை ஏற்படுத்தியதற்காக இரண்டு தொழிற்சாலைகளுக்கு அபராத விதிப்பு
சுற்றுச்சூழலில் மாசுபாட்டை ஏற்படுத்தியதற்காக இரண்டு தொழிற்சாலைகளுக்கு அபராத விதிப்பு

ஷா ஆலம், டிச 17: சுற்றுச்சூழலில் மாசுபாட்டை ஏற்படுத்தியதற்காக இரண்டு தொழிற்சாலைகளுக்கு மொத்தம் RM2,000 அபராதம் விதித்துள்ளதாகக் கிள்ளான் அரச நகர மன்றத்தின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் துறையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கிள்ளான் சென்ட்ரல் தொழில்துறை பூங்காவில் உள்ள ஒரு அலுமினிய பதப்படுத்தும் தொழிற்சாலை, சுற்றுச்சூழலில் தூசியை வெளியிட்டு விரும்பத்தகாத வாசனையை உருவாக்குவதாக ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டதாக நோர்ஃபிசா மஹ்ஃபி கூறினார்.

புகை மற்றும் துர்நாற்றம் தொடர்பாக குடியிருப்பாளர்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, எம்பிடிகே அமலாக்கத் துறை மற்றும் உரிமத் துறை உறுப்பினர்களை உள்ளடக்கிய சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

துணைச் சட்டம் 32 (MBDK) 2007 இன் கீழ் RM1,000 அபராதமும் வளாகத்திற்கு வெளியே பொருட்களை வைத்து பொது இடங்களில் இடையூறை ஏற்படுத்தியதற்காக சாலைகள், வடிகால்கள் மற்றும் கட்டிடங்கள் சட்டம் 1974 இன் பிரிவு 46(1)(d) இன் கீழ் RM250 அபராதமும் விதிக்கப்பட்டது," என்று நோர்ஃபிசா கூறினார்.

மேலும், சுங்கை காப்பார் இண்டாவில் உள்ள இன்னொரு தொழில்சாலையில் நடத்தப்பட்ட சோதனையிலும் RM1,000 அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சட்டத்திற்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் சுற்றுச்சூழலையும் உள்ளூர்வாசிகளின் வசதியையும் பாதுகாப்பதற்கும் எம்பிடிகே மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது என்று நோர்ஃபிசா வலியுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.