அடுத்து ஆண்டு AWAS அமைப்பு மேம்படுத்தப்படும்

15 டிசம்பர் 2025, 9:11 AM
அடுத்து ஆண்டு AWAS அமைப்பு மேம்படுத்தப்படும்

ஷா ஆலம், டிச 15: தானியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு அமைப்பு (AWAS) அடுத்த ஆண்டு மேலும் வலுப்படுத்தப்படும். இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 10 புதிய இடங்களில் கேமராக்களை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது.

கேமரா பொருத்தப்படும் இடங்கள் முழுமையாக விபத்து தரவுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன. குறிப்பாக, அதிக ஆபத்து உள்ளதாக அடையாளம் காணப்பட்டும், அடிக்கடி விபத்துகள் நிகழும் சாலைகளில் இந்த நிறுவல் மேற்கொள்ளப்படும் என RTM செய்தி வெளியிட்டுள்ளது.

AWAS கேமராக்கள் வாகன ஓட்டிகளை சிக்கவைக்கவேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்படவில்லை; மாறாக, சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாகவே இது செயல்படுகிறது என்று போக்குவரத்து துணை அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லா கூறினார்.

“தேர்வு செய்யப்பட்ட இடங்கள் அதிக ஆபத்து உள்ள பகுதிகளாகவும், ‘பிளாக் ஸ்பாட்’ எனப்படும் விபத்து அதிகம் நிகழும் இடங்களாகவும் உள்ளன,” என்று அவர் தேசிய மன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

விபத்து தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த அணுகுமுறை, AWAS அமைப்பை அமலாக்க நடவடிக்கையாக மட்டுமல்லாமல், விபத்துகளைத் தடுக்க உதவும் ஒரு பயனுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாற்றுவதற்கும் முக்கியம் என அவர் கூறினார்.

இந்த புதிய இடங்கள் சேர்க்கப்படுவதன் மூலம், AWAS அமைப்பின் செயல்திறன் மேலும் மேம்பட்டு, அனைத்து சாலை பயனாளர்களுக்கும் பாதுகாப்பான சாலை சூழலை உருவாக்க அரசின் முயற்சிகளுக்கு துணைபுரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.