நான்கு இடங்களுக்கு நேரடி விமான சேவைகளை பாத்திக் ஏர் அறிமுகப்படுத்தியுள்ளது

12 டிசம்பர் 2025, 10:06 AM
நான்கு இடங்களுக்கு நேரடி விமான சேவைகளை பாத்திக் ஏர் அறிமுகப்படுத்தியுள்ளது

சுபாங், டிசம்பர் 12 —சுபாங் உள்ள சுல்தான் அப்துல் அசீஸ் ஷா விமான நிலையத்திலிருந்து, சிங்கப்பூர், ஜகார்த்தா, ஜோகூர் பாரு மற்றும் லங்காவி ஆகிய நான்கு இடங்களுக்கு நேரடி விமான சேவைகளை பாத்திக் ஏர் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய பாதை விரிவாக்கம், கிள்ளான் பள்ளத்தாக்கு பயணிகளுக்கு சுபாங் விமான நிலையத்தை மேலும் வசதியான நகர நுழைவாயிலாக வலுப்படுத்தும் என ஏர்லைன் தெரிவித்துள்ளது.

சுபாங் விமான நிலையத்தின் மையப் பகுதி அமைவிடம் மற்றும் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள், தொழில் மற்றும் பொழுதுபோக்கு பயணிகளிடையே அதன் வரவேற்பை அதிகரிக்க உதவும் என்று பாத்திக் ஏர் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் பவானி வீரையா கூறினார்.

“சுபாங் விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டில் உற்சாகமாக திகழ்கிறது. அதன் மைய அமைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட முகாம் காரணமாக உருவாகும் புதிய வளர்ச்சியில் பங்கேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று அவர் இன்றைய தொடக்க விழாவுடன் இணைத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.