கடப்பிதழ் மோசடியில் ஈடுபட்டதாக எல்லை பாதுகாப்பு துறை அதிகாரிக்கு எதிராக தடுப்பு காவல் விதிப்பு

8 டிசம்பர் 2025, 8:43 AM
கடப்பிதழ் மோசடியில் ஈடுபட்டதாக எல்லை பாதுகாப்பு துறை அதிகாரிக்கு எதிராக தடுப்பு காவல் விதிப்பு

ஜொகூர் பாரு, டிச 8- கடப்பிதழ் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் எல்லை பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு துறையின் அதிகாரிக்கு எதிராக நான்கு நாட்கள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி இந்த நடவடிக்கையை ஜொகூர் பாருவில் உள்ள சுல்தான் இஸ்கண்டார் கட்டிடத்தில் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது

MYBORDER PASS முகப்பில் அந்த அதிகாரியைச் சோதனை செய்தபோது இந்த நடவடிக்கை கண்டறியப்பட்டதாக AKPS கமொண்டர் ரொஸித்தா டிம் கூறினார்.

பணியின் போது தொலை தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தியதாகவும் அவர் விதிமுறைகளை மீறியதாகவும் அவர் சொன்னார். மேலும், எட்டு கடப்பிழ்களும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

1966ஆம் ஆண்டு கடப்பிதழ் சட்டத்ஹின் செக்‌ஷன் 12(1) எஃப் இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுவதாக அவர் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.