இந்தோனேசிய அதிபர் பிரபோவோ ரஷ்யாவுடனான குற்றவாளிகளை ஒப்படைப்பு ஒப்பந்தத்தை அங்கீகரித்தார்

6 டிசம்பர் 2025, 5:23 AM
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ ரஷ்யாவுடனான  குற்றவாளிகளை ஒப்படைப்பு ஒப்பந்தத்தை அங்கீகரித்தார்

ஜகார்த்தா, டிசம்பர் 5 — இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ, ரஷ்ய கூட்டமைப்புடனான  குற்றவாளிகளை  ஒப்படைப்பு (extradition) ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து, 2025-ஆம் ஆண்டின் சட்ட எண் 19-ஐ பிறப்பித்துள்ளார்.அன்தரா செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த சட்டத்தில் அதிபர் கையெழுத்திட்டது கடந்த அக்டோபர் 29 அன்று ஜகார்த்தாவில் நடந்தது என்று இன்று அரசு செயலக அமைச்சகத்தின் சட்ட ஆவணப்படுத்தல் மற்றும் தகவல் இணையத்திலிருந்து தெரியவந்தது.இரு நாடுகளுக்கு இடையேயான இந்த இருதரப்பு ஒப்பந்தத்துக்கு உள்நாட்டு சட்ட அடிப்படையை வழங்குவதே இந்தச் சட்டத்தின் நோக்கம். குறிப்பாக, எல்லை தாண்டிய குற்றங்களை எதிர்கொள்வதில் சட்ட அமலாக்க ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இதன் முக்கிய நோக்கம்.இந்த ஒப்பந்தம் முன்னதாக 2023 மார்ச் 31 அன்று இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜகார்த்தாவும் மாஸ்கோவும் கையெழுத்திட்டன.இந்தோனேசிய மக்கள் பிரதிநிதிகள் சபை (DPR) மற்றும் அதிபரின் ஒப்புதலுக்குப் பிறகே இந்த அங்கீகரிப்பு நடைபெற்றது.2025-ஆம் ஆண்டு சட்ட எண் 19-இன் பிரிவு 1-இல், ஒப்படைப்பு ஒப்பந்தம் அங்கீகரிக்கப் பட்டுள்ளதாகவும், இந்தோனேசியம், ரஷ்யம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலான அசல் உரைகள் சட்டத்தின் பிரிக்க முடியாத பகுதிகளாக இணைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்கும் இந்தோனேசியா, சர்வதேச உறவுகளையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.விஞ்ஞானம், தொழில்நுட்பம், போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகியவற்றின் வளர்ச்சியால் எல்லைகள் கிட்டத்தட்ட “எல்லையில்லாதவை” ஆகி விட்டன; இதனால் குற்றவாளிகளும்  விசாரணை, வழக்கு, தண்டனை ஆகியவற்றிலிருந்து தப்பிப்பது எளிதாகிவிட்டது என்று சட்டத்தின் பொது விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த ஒப்படைப்பு ஒப்பந்தம், பரஸ்பர நன்மை அடிப்படையில் இருதரப்பு சட்ட அமலாக்க ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், 2021-ஆம் ஆண்டு சட்ட எண் 5-ஆல் அங்கீகரிக்கப்பட்ட “குற்ற வழக்குகளில் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை” (Mutual Legal Assistance in Criminal Matters) இது நிறைவு செய்கிறது.2025 சட்ட எண் 19-இல் ஒப்படைப்பு குறித்த முக்கிய அம்சங்கள் ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளன: குற்றவாளிகளை ஒப்படைக்க வேண்டிய கடமை, ஒப்படைக்கப்படக் கூடிய குற்றங்கள், மறுப்பதற்கான அடிப்படைகள், தேவையான கோரிக்கைகள் மற்றும் ஆதார ஆவணங்கள், நபர்களை ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் ஆகியவை அடங்கும்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.