வார இறுதியில் மலேசிய குடிமக்களுக்கு தேசிய அருங்காட்சியகத்தில் இலவச நுழைவு

5 டிசம்பர் 2025, 9:38 AM
வார இறுதியில் மலேசிய குடிமக்களுக்கு தேசிய அருங்காட்சியகத்தில் இலவச நுழைவு

கோலாலம்பூர், டிசம்பர் 5: மலேசியா அருங்காட்சியக துறை வருகின்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மலேசிய குடிமக்களுக்கு தேசிய அருங்காட்சியகத்தில் இலவச நுழைவு வழங்க உள்ளது. இது மடாணி அரசின் மூன்று ஆண்டு நிறைவையும், “Rancakkan MADANI Bersama Malaysiaku” விழாவையும் முன்னிட்டு நடக்கிறது.

தேசிய ஒற்றுமை துறை   இன்று வெளியிட்ட அறிக்கையில், இந் நிகழ்ச்சி பொதுமக்களை, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குடும்பங்களை, நாட்டின் வரலாற்றைப் பற்றிய பொது அறிவை விரிவுபடுத்தவும், மலேசியாவின் அடையாளத்தை உருவாக்கிய பாரம்பரியத்தை மதிப்பிடவும் ஊக்குவிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையின் படி, தேசிய அருங்காட்சியகம் நான்கு முக்கிய அருங்காட்சியக பகுதிகளைக் கொண்டுள்ளது. இவை மலேசியாவின் வரலாற்று பயணத்தைத் திரைக் காட்சியிடுகின்றன, அதில் பூர்வகாலம், மலாய் சுல்தான்கள் காலம், காலனியவாதம் மற்றும் நவீன நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

பார்வையாளர்கள், அருங்காட்சியகத்தின் இணையத்தை பார்வையிட்டு, கூடுதலான தகவல்களை பெறலாம். மேலும், வரலாற்றை புரிந்து கொள்வது ஒற்றுமையை ஊக்குவிக்கும் முக்கிய அடித்தளம், தேசிய மதிப்புகளை வலுப்படுத்தும் மற்றும் மலேசியர்களின் ஒற்றுமை உணர்வை மேம்படுத்தும் என்பதாகும் என்று தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் கூறினார்.

இலவச நுழைவு வழங்குவதன் மூலம் பொதுமக்களுக்கு நாட்டின் வரலாற்று பயணத்துடன் மீண்டும் தொடர்பு கொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும் நாட்டின் தேசிய அருங்காட்சியகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.