ஷா ஆலாம், டிசம்பர் 4 — இன்று மாலை பெய்த கனமழைக்குப் பிறகு சிலாங்கூரில் பல முக்கிய ஆறுகள் எச்சரிக்கை மற்றும் ஆபத்து நிலைகளைத் தாண்டியுள்ளன. இந்த வளர்ச்சி சிலாங்கூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் (JPS) அதிகாரப்பூர்வ இன்போபஞ்சிர் போர்ட்டலில் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இரவு 10.20 மணி நிலவரப்படி உள்ளது. அதிகளவு உயர்வைக் காட்டும் இடம் கோல லங்காட்டின் புக்கிட் சாங்காங்கில் உள்ள சுங்கை லங்காட் ஆகும்; தற்போது 4.75 மீட்டர் அல்லது ஆபத்து நிலையைவிட 0.55 மீட்டர் அதிகமாக உள்ளது.
சிப்பாங்கின் ஜெண்டராம் ஹிலிரில் உள்ள சுங்கை லங்காட்டும் 12.31 மீட்டராக உயர்ந்து, ஆபத்து நிலையைத் தாண்டியுள்ளது மற்றும் தொடர்ந்து உயரும் போக்கு உள்ளது. உலு சிலாங்கூரில், SKC பாலத்தில் உள்ள சுங்கை பெர்ணமின் நீர்மட்டம் 18.69 மீட்டராக உள்ளது (எச்சரிக்கை நிலைக்கு சற்று மேல்), சபாக் பெர்ணமின் ரிம்பா KDR இல் 2.22 மீட்டர் பதிவாகியுள்ளது (எச்சரிக்கை நிலைக்கு மேல் ஆனால் தற்போது குறைந்து வருகிறது). சுங்கை செமன்ஞியில் (பெக்கான் பாங்கி லாமா, கம்போங் பாசிர்) மற்றும் உலு லங்காட்டின் பத்து 12 இல் உள்ள சுங்கை லங்காட் உள்ளிட்ட பல ஆறுகள் எச்சரிக்கை நிலையில் உள்ளன; சிலவற்றில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்கிறது. இதற்கிடையில், சமூக நலத்துறையின் இன்போபெஞ்சானா போர்ட்டலின்படி, இன்று உலு லங்காட்டில் இரண்டு PPS திறக்கப்பட்டன: - SRA டூசுன் நண்டிங் - SK சுங்கை செராய் SK சுங்கை செராய் PPS இல் தற்போது 127 வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்கியுள்ளனர், SRA டூசுன் நண்டிங்கில் 156 பேர் உள்ளனர். இன்றிரவு நிலவரப்படி மொத்தம் 253 குடும்பங்களைச் சேர்ந்த 798 வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்கள் 9 PPS இல் தங்கியுள்ளனர். இதுவரை மூன்று மாவட்டங்களில் PPS எனப்படும தற்காலிக இடமாற்ற மையங்கள் திறக்கப்பட்டுள்ளது: - கோலா சிலாங்கூர் (நவம்பர் 26 அன்று திறக்கப்பட்டது) → 6 PPS இயங்குகின்றன, 147 குடும்பங்களைச் சேர்ந்த 502 பாதிப்புக்குள்ளானவர்கள் - உலு லங்காட் (இன்று திறக்கப்பட்டது) → 2 PPS இயங்குகின்றன, 98 குடும்பங்களைச் சேர்ந்த 283 பாதிப்புக்குள்ளானவர்கள் - சபாக் பெர்ணம் (டிசம்பர் 1 அன்று திறக்கப்பட்டது) → 1 PPS இயங்குகிறது, 8 குடும்பங்களைச் சேர்ந்த 13 பாதிப்புக்குள்ளானவர்கள் உள்ளனர்




