உலு லங்காட் மாவட்டத்தின் சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது

4 டிசம்பர் 2025, 4:15 AM
உலு லங்காட் மாவட்டத்தின் சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது

உலு லங்காட், டிச 4- சிலாங்கூர் மாநிலத்தில் இன்று அதிகாலை தொடங்கி பெய்து வரும் கனமழையின் காரணமாக உலு லங்காட் மாவட்டத்தின் சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துகொண்டது.

பத்து 20, கம்போங் நன்டிங், டுசுன் துவா, பத்து 18 சுங்கை லுய் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

வெள்ள அபாய ஒலியும் ஒலிக்க செய்துவிட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

வெள்ளப்பேரிடர் காரணமாக பொதுமக்கள் அண்மைய நிலவரங்களைத் தெரிந்து வைத்து கொள்வதுடன் அமலாக்க துறைக அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.