காணாமல் போன போலீஸ்காரர் சிப்பாங்  நீரில் மூழ்கி உயிரிழப்பு

30 நவம்பர் 2025, 5:03 AM
காணாமல் போன போலீஸ்காரர் சிப்பாங்  நீரில் மூழ்கி உயிரிழப்பு

சிப்பாங், நவம்பர் 30 - இங்குள்ள கிளினிக் தேசா கிச்சிங்கில் வெள்ளிக்கிழமை பலத்த நீரோட்டங்களால் அடித்துச் செல்லப் பட்டதாக நம்பப் பட்ட பின்னர் காணாமல் போன ஒரு போலீஸ்காரர் இன்று நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டார்.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜே. பி. பி. எம்) துணை இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறுகையில், பாதிக்கப்பட்டவரின் உடல் காலை 7.30 மணிக்கு தேடல் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது.

"காவல் துறையினரும் தீயணைப்பு வீரர்களும் வாகனத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் சடலத்தைக் கண்டுபிடித்தனர்" என்று அவர் இங்கு செய்தியாளர்களிடம் கூறினார்.

நேற்று, சிப்பாங் காவல்துறைத் தலைவர் ஏ. சி. பி. நோர்ஹிசம் பஹமான் கூறுகையில், நிலாய் காவல் தலைமையகத்தில் இருந்து பாதிக்கப் பட்டவர், இங்குள்ள தனது குடும்பத்தினரைச் சந்தித்தப்பின் வேலைக்கு திரும்பியதாக நம்பப்படுகிறது.

வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு கிளினிக் தேசா கிச்சிங் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் அவர் ஓட்டி வந்த பெரோடுவா பெஸா ஒரு வடிகாலில் சறுக்கியதாக தெரிவிக்கப்பட்டது

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.