கோத்தா கினபாலு, நவம்பர் 29 — 17-வது சபா மாநில தேர்தலுக்கான அனைத்து 882 வாக்கு மையங்களும் தேர்தல் அன்று மாலை 5.30 மணிக்கு மூடப் பட்டன. காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய பின்னர், 3,599 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய இந்த மையங்கள் படிப்படியாக மூடப்பட்டன. சபா மாநில சட்டமன்றத்தில் போட்டியிடும் 73 இடங்களுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக இன்றைய தேர்தலில் 1.74 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் பங்கேற்றனர்.
தேர்தல் ஆணைக்குழு (EC) வெளியிட்ட தகவலின்படி, மாலை 4 மணி வரை 60.94 சதவீதமானவர்கள், அதாவது 1,062,114 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
ஆரம்ப கட்ட வாக்கு முடிவுகளை நேற்று இரவு 10 மணி அளவில் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கிடையில், நேற்று மாலை 5 மணிக்குள் தபால் வாக்குச் சீட்டு உறைகளைப் பெறுவதற்கான காலக்கெடுவிற்கு முன்னதாக, பல வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்கு சீட்டு உரைகளைத் திறக்கும் பணியை EC தொடங்கியுள்ளது.
உரைகளைத் திறக்கும் இந்த செயல்முறை தேர்தல் ஆணைக்குழுவின் பேஸ்புக் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. இது தபால் வாக்கு நிர்வாகத்தின் நான்கு முக்கிய கட்டங்களில் மூன்றாவது கட்டமாகும் — வழங்குதல், பெறுதல், திறத்தல் மற்றும் இறுதியாக எண்ணுதல்.
தேர்தல்கள் அகாடமியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது: இந்த மாநில தேர்தலுக்காக 22,880 தபால் வாக்கு விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப் பட்டுள்ளன. இவை 1A, 1B மற்றும் 1C பிரிவுகளை உள்ளடக்கியது.
இப்பிரிவுகளில் தேர்தல் ஆணைக்குழு ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், பாதுகாப்புப் படையினர், வாக்குப்பதிவு நாள் ஊழியர்கள், வெளிநாட்டு வாக்காளர்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அடங்குவர்.
தேர்தல் ஆணைக்குழுவின் நேரடி ஒளிபரப்பில், சபா வேளாண்மைத் துறையின் டேவான் ஜாட்டியில் இரு மாநில தொகுதிகளான N53 செகோங் மற்றும் N54 கராமுன்டிங் ஆகியவற்றுக்கான உறைகள் திறக்கப்படும் செயல்முறை காண்பிக்கப்பட்டது.
N53 செகோங் தொகுதிக்கு 286 தபால் வாக்குகள் செயலாக்கப்பட உள்ளன. இதில் 265 பிரிவு 1A, 5 பிரிவு 1B மற்றும் 16 பிரிவு 1C வாக்குகள் அடங்கும்.
அதேநேரம் N54 கராமுன்டிங் தொகுதிக்கு 696 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. இதில் 685 பிரிவு 1A, 3 பிரிவு 1B மற்றும் 8 பிரிவு 1C வாக்குகள் அடங்கும்.
இன்றைய செயல்முறைக்கு பினாங்கு தேர்தல் அதிகாரிகள் உதவி செய்கின்றனர். பல வேட்பாளர் பிரதிநிதிகளும் உறைகள் திறக்கப் படுவதைக் கண்காணிக்க உள்ளனர்.


