இலங்கையில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு- 56 பேர் பலி

28 நவம்பர் 2025, 8:11 AM
இலங்கையில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு- 56 பேர் பலி

கொழும்பு, நவ 28- இலங்கையில் தொடர்ச்சியான பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது,

மேலும் 21 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க, ஹெலிகாப்டர்கள், கடற்படைப் படகுகள் மற்றும் கவச வாகனங்கள் உட்பட இராணுவச் சொத்துக்களை அதிகாரிகள் பயன்படுத்தியதாக இலங்கை பேரிடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

65,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தீவின் கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது, சில மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 360 மில்லிமீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.

நாட்டின் முக்கிய தேயிலை பயிரிடும் பகுதியான பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு இலங்கை வழியாக நகர்ந்து வரும் 'திட்வா'  என்ற பலத்த புயல் அமைப்பு, ஞாயிற்றுக் கிழமைக்குள் இந்தியாவின் தமிழ்நாட்டை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் தொடர்ந்து பலத்த மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சுமார் 1,800 குடும்பங்கள் வெளியேற்றப் பட்டுள்ளன, மேலும் கிட்டத்தட்ட 700 வீடுகள் சேதமடைந்துள்ளன.

நாடு முழுவதும் உள்ள ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.