சென்யார் புயல்: சிலாங்கூர் பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்தியது

28 நவம்பர் 2025, 3:46 AM
சென்யார் புயல்: சிலாங்கூர் பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்தியது

ஷா ஆலம், 28 நவம்பர்: சிலாங்கூர் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) தனது அணிகள் முன்னெச்சரிக்கை நிலையை அதிகரித்து, இடையறாத பேரிடர் வாய்ப்புகளையும் குறிப்பாக வெப்பமண்டல புயல் அச்சுறுத்தலையும் சமாளிக்கத் தயாராகியுள்ளது.

ஏழு மண்டலங்களிலாக உள்ள 38 தீயணைப்பு நிலையங்களும் 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருந்து, அனைத்து உறுப்பினர்களும் உபகரணங்களும் முழுமையாக தயார் நிலையில் உள்ளதாக துறையின் பொது தொடர்பு அதிகாரி மொஹ்ட் நச்ருல்லாஹ் அப்துல் அஸிஸ் தெரிவித்தார். அனைத்து சம்பந்தப்பட்ட அமைப்புகளும் தங்களது பொறுப்புகளை நன்றாகப் புரிந்து செயல்படுகின்றன. காலநிலையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

நேற்று, மலேசிய வானிலைத் துறை சிலாங்கூர், பேராக் மற்றும் பகாங் மாநிலங்களில் சென்யார் எனப்படும் வெப்பமண்டல புயல் இன்று நள்ளிரவு முதல் ஞாயிறு வரை தாக்கக்கூடும் எனத் தெரிவித்தது. புயல் காற்றின் வேகம் அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வரை உயரக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் அபாயப்பகுதிகளில் உள்ள மக்களை எப்போதும் எச்சரிக்கையுடன் இருந்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.