கிள்ளான், நவ 26: ஊடகவியாளர்கள் தினசரி பணியின் போது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை உதவிக் கருவியாகப் பயன்படுத்தலாம், ஆனால், அது வேலைத் தரத்தை குறைக்கும் சுலபமான வழியாகப் பயன்படுத்தப்படக் கூடாது.
ஊடகத் துறையில் AI பயன்பாடு அவசியமாக மாறிக் கொண்டிருப்பதாகும்; ஆனால் ஊடகவியாளர்கள் அதே முழுமையாக நம்பி இருக்கக் கூடாது எனவும் ஆஸ்ட்ரோ அவானி சமூக ஊடகத் தலைமை ஆசிரியர் ஹிலால் அஸ்மி தெரிவித்தார்.
AI தொழில்நுட்பத்தை கவனமாகவும், திறமையாகவும் பணியாற்ற உதவும் கருவியாக பார்க்க வேண்டும் என்பதோடு முறையான தொழில்முறையை ஊடகவியாளர்கள் புறக்கணிக்கக்கூடாது,” என்றும் அவர் ‘AI & Media: புதிய பார்வை – சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்ற கருத்தரங்கில் தெரிவித்தார்.
AI தொழில்நிட்பத்தை நெறிமுறையுடன் பயன்படுத்துவதற்கான மூன்று நிலைகள் உள்ளன. அவை தகவல் தேடல் அல்லது ஆரம்ப ஆய்வு, கட்டுரையின் முதல் வடிவத்தை உருவாக்குதல் மற்றும் பரிமாற வேண்டிய தகவலின் தெளிவையும் புரிதலையும் மறுபரிசீலனை செய்தல் ஆகியவை ஆகும்.
“AI உட்பட, எந்த தொழில்நுட்பத்தையும் ஒரு கருவியாக மட்டும் ஊடகவியாளர்கள் பயன்படுத்த வேண்டும், மாறாக 100% அதை நம்பி இருக்கக் கூடாது,” என்று அவர் வலியுறுத்தினார்.
தொழில்நுட்பம் பணியை வேகமாகச் செய்ய உதவினாலும், ஊடகவியாளர்களின் மதிப்பாய்வு மற்றும் தகவல் சரிபார்ப்புத் திறனை மாற்ற முடியாதது என்றும் அவர் நினைவூட்டினார்.
இந்த கருத்தரங்கு, 100க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் நடைபெற்றது. அவர்கள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இந்நிகழ்வின் நோக்கம், அரசாங்க தகவல் பரிமாற்றத்திலும் AI தொழில்நுட்பத்தின் பங்கு பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதும், மேலும் துல்லியமான மற்றும் விரைவான உள்ளடக்கங்களை உருவாக்கும் திறனை மேம்படுத்துவதும் ஆகும்.



