மூன்று ஜேபிஎஸ் நிலையங்களில் அபாய நீர்மட்டம்

26 நவம்பர் 2025, 4:08 AM
மூன்று ஜேபிஎஸ் நிலையங்களில் அபாய நீர்மட்டம்

ஷா ஆலம், 26 நவம்பர்: இன்று காலை 9 மணிவரை, சிலாங்கூர் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறையின் (ஜேபிஎஸ்) மூன்று கண்காணிப்பு நிலையங்களில் நீர்மட்டம் அபாய நிலையை மீறி பதிவாகியுள்ளது.

உலு சிலாங்கூரில் உள்ள எஸ்கேசியில் நீர்மட்டம் 19.64 மீட்டர், கோல சிலாங்கூரிலுள்ள ஈஜோக் நீர்வாயில் 4.2 மீட்டர், கிள்ளான் மாநில மேருவில் 4.4 மீட்டர் என பதிவாகியுள்ளதாக ஜேபிஎஸ் வெள்ளத் தகவல் தளம் தெரிவித்துள்ளது. அத்துடன், ரந்தாவ் பஞ்சாங் மற்றும் கம்போங் ஆசஹான் ஆகிய இரண்டு ஜேபிஎஸ் நிலைய எச்சரிக்கை நிலைக்குள் உள்ளன; அவை 7.4 மீட்டரும் 3.52 மீட்டரும் பதிவாகியுள்ளன.

இதே நேரத்தில் தற்காலிக இடமாற்ற மையங்களின் எண்ணிக்கை மாற்றமின்றி நீடித்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சிறிய அளவில் உயர்வு பெற்றுள்ளது என்று சமூக நலத்துறை பேரிடர் தகவல் தளம் தெரிவித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மாநில அரசு முன்கூட்டியே அனைத்து சம்பந்தப்பட்ட முகமைகளும் தயாராக இருக்குமாறு, குறிப்பாக போக்குவரத்து மற்றும் அவசர உதவி ஒத்துழைப்பில் கவனம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

பொது மக்கள் எப்போதும் வானிலை எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டு அதிகாரப்பூர்வ தளங்கள் வழியாக வெளியிடப்படும் தகவல்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.