ad

13 சட்ட திருத்தத்திற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இணக்கம்- நாடாளுமன்றத்தில் தகவல்

25 நவம்பர் 2025, 8:14 AM
13 சட்ட திருத்தத்திற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இணக்கம்- நாடாளுமன்றத்தில் தகவல்

கோலாலம்பூர், நவ 25- கடந்த ஜூலை 21 முதல் செப்டம்பர் 10 வரை நடைபெற்ற 15-வது நாடாளுமன்றத்தின் நான்காவது தவணையின் இரண்டாவது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 13 சட்டத்தின் திருத்தங்களுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்ததாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இன்று மக்களவைக் கூட்டத்தொடரில் அமைச்சர்களுக்கான கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன்னர் மக்களவை சபாநாயகர் டான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல் இந்தத் தகவலை அறிவித்தார்.

தேசியப் பதிவு (திருத்தம்) சட்டம் 2025 மற்றும் கல்வி (திருத்தம்) சட்டம் 2025 உள்ளிட்ட பல முக்கியச் சட்டமூலங்கள் இதில் அடங்கும். ஒப்புதல் அளிக்கப்பட்ட ஏனைய சட்டமூலங்களில் கட்டணங்கள் (பெங்காலான் கூபோர் படகு) (உறுதிப்படுத்தல்) சட்டம் 2025, குற்றவாளிகளின் கட்டாய வருகை (திருத்தம்) சட்டம் 2025, திண்மக் கழிவு மேலாண்மை மற்றும் பொதுச் சுத்திகரிப்பு (திருத்தம்) சட்டம் 2025, உள்ளூராட்சி (திருத்தம்) சட்டம் 2025, சாலைகள், வடிகால் மற்றும் கட்டிடங்கள் (திருத்தம்) சட்டம் 2025, நச்சுப்பொருட்கள் (திருத்தம்) சட்டம் 2025, தகவல் தெரிவிப்பவர் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2025, எரிசக்தி ஆணையம் (திருத்தம்) சட்டம் 2025, மின்சார விநியோகம் (திருத்தம்) சட்டம் 2025, ஈடுசெய்யும் கடமைகள் மற்றும் குப்பைக் கொட்டுதல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டம் 2025, அணுசக்தி உரிமம் (திருத்தம்) சட்டம் 2025 ஆகியவையும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைகளைக் கையாள்வதில் சமூகத்தின் ஆதரவையும் புரிதலையும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் டான் ஸ்ரீ ஜோஹாரி வலியுறுத்தினார்.

நவம்பர் 25 அன்று அனுசரிக்கப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்துடன் ஒருமைப்பாட்டின் அடையாளமாக, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தொடரின்போது ஆரஞ்சு நிற ஆடை அல்லது துணைப் பொருட்களை அணியுமாறு டான் ஸ்ரீ ஜோஹாரி நேற்று ஊக்குவித்திருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.