ad

பாதுகாப்பான இணைய பிரச்சாரம் 2025 இலக்கை மிஞ்சியது 

24 நவம்பர் 2025, 4:23 AM
பாதுகாப்பான இணைய பிரச்சாரம் 2025 இலக்கை மிஞ்சியது 

கோலாலம்பூர், நவம்பர் 23 — மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) நடத்தும் **பாதுகாப்பான இணைய பிரச்சாரம்** இந்த ஆண்டுக்கான 8,000 பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என்ற இலக்கை மிஞ்சியுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாமி பட்ஸில் தெரிவித்தார்.

நவம்பர் 20 (வியாழக்கிழமை) வரை இந்த பிரச்சாரம் **8,216 பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில்** நடத்தப்பட்டுள்ளது.“இன்று மட்டும் 58 பள்ளிகளில் பாதுகாப்பான இணைய பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதை நாம் மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகள் உள்ளன; இவையே பாதுகாப்பான இணைய பிரச்சாரத்தின் முதன்மை இலக்குகளாகும்.

ஏனெனில் சைபர் புல்லிங் (இணைய பகடிவதை) பிரச்சினை தவிர, மோசடி, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள், குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் போன்ற பிரச்சினைகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது,” என்று அவர் இன்று லெம்பா பந்தை இந்திய சமூக சைபர் மோசடி விழிப்புணர்வு கருத்தரங்கின் நிறைவு விழாவைத் தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள **ஒவ்வொரு பள்ளியிலும்** இந்த பிரச்சாரம் நடத்தப்படும் என்று அமைச்சகம் நம்பிக்கை கொண்டுள்ளதாக பாமி மேலும் தெரிவித்தார்.

**பாதுகாப்பான இணைய பிரச்சாரத்தின் நோக்கம்**:  குறிப்பாக மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பொறுப்பான இணையப் பயன்பாடு குறித்து கல்வி அளிப்பது, டிஜிட்டல் எழுத்தறிவு அதிகரிப்பது மற்றும் மிகவும் நேர்மறையான ஆன்லைன் சூழலை உருவாக்குவதாகும்.  இது சைபர் புல்லிங், (பகடி வதை )  ஆன்லைன் மோசடி, டிஜிட்டல் சூதாட்டம் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் போன்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்துகிறது.

இதற்கிடையில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க பெற்றோர்கள் தங்களது பங்கை ஆற்ற வேண்டும் என்றும் அமைச்சர் நினைவூட்டினார்.16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடக கணக்கு வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது என்ற அரசாங்கத்தின் முடிவு சமூக ஊடக தள நிறுவனங்கள் கடைப் பிடிக்க வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.