ஷா ஆலம், நவம்பர் 22 — மோரிப் பே என்ற இடத்தில் உள்ள ரூமா சிலாங்கூர் கூ திட்டத்திற்கு ஒரு நல்ல தீர்வை காணும் நோக்கத்தில் அத்திட்டத்தை கைவிடப்பட்ட திட்டமாக அறிவிக்காமல், ஒத்திவைக்கப் பட்டுள்ளது என்று மாநில வீட்டுவசதி மற்றும் கலாச்சார நிர்வாகக் குழு உறுப்பினர் டத்தோ பொர்ஹான் அமான் ஷா கூறினார்.
அசல் மேம்பாட்டாளர்கள் எதிர்கொண்ட கடுமையான நிதி சிக்கல்களால் திட்ட தாமதங்கள் ஏற்பட்டன, அது திவாலானதாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். ஆனால் அப்படி செய்யவில்லை. இந்தத் திட்டம் "கைவிடப்பட்டது" என்றும் வகைப்படுத்த படவில்லை , ஏனெனில் அது ஒரு தீர்வைத் தாமதப்படுத்தும் மற்றும் நீண்ட நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாகும்.
"நாங்கள் வீட்டுவசதி மற்றும் உள்ளூர் அரசு அமைச்சகத்துடன் (KPKT) பேசியுள்ளோம், (திட்டத்தை) 'கைவிடப்பட்டது' என வகைப் படுத்த வேண்டாம் என்றும். அது அந்தவகையில் செயல் பட்டால் , நீதிமன்ற முடிவுக்கு நீண்ட காலம் எடுக்கும்," என்று அவர் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் வியாழக்கிழமை தனது முடிவுரையில் கூறினார்.
"நாங்கள் இந்தத் திட்டத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகளை அழைத்து ஆலோசித்தோம், அவர்களில் நில உரிமையாளர், PNB (பெர்மோடா லான் நேஷனல் பிஎச்டி). கைவிடப்பட்ட திட்டங்களுக்கு உதவக்கூடிய சாதனை கொண்ட நிறுவனங்களுடன் நாங்கள் பேசியுள்ளோம்," என்று புர்ஹான் கூறினார்.
இந்த விவாதங்கள் நேர்மறையான வளர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது, இதில் வீட்டு உரிமையை விரிவுபடுத்துவதற்காக கிட்டத்தட்ட முடிந்துள்ள யூனிட்டுகளுக்கு வாங்குபவர்களை மாற்றுவதற்கான பரிந்துரை உள்ளடங்கும் என்றார்.
"இந்தத் திட்டத்தில் இரண்டு கட்டங்கள் உள்ளன: தொடர் வீடுகள் மற்றும் ஒரு அபார்ட்மெண்ட். முழுமையடையாத அபார்ட்மெண்ட் யூனிட்கள் வாங்குபவர்களை கிட்டத்தட்ட 95 சதவீதம் முடிந்துள்ள தொடர் யூனிட்டுகளுக்கு தங்கள் கொள்முதலை மாற்ற நாங்கள் பரிந்துரை-க்கிறோம்," என்று அவர் விளக்கினார்.
காணப்பட்ட தீர்வுகளில், வாங்குபவர்கள் திட்ட மீட்புக்கு அனுமதிக்க RM30 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படும் காலதாமத்திற்கான நஷ்ட தொகைக்கான கோரிக்கையை கைவிடுவது. உறுதிப்படுத்தப்பட்ட சேதங்கள் (LAD) தாமத விநியோக கட்டணம் கோராமல் இருக்க ஒப்புக் கொள்ள வேண்டும்,, மேலும் குறைகளை மேம்படுத்தி கட்டிமுடிக்க RM 160 மில்லியனுக்கும் மேல் செலவாகும் என்று புர்ஹான் கூறினார்.
அவரது கூற்றுப்படி, நில உரிமையாளர், வாங்குபவர்கள் மற்றும் புதிய மேம்பாட்டாளர் உட்பட அனைத்து கட்சிகளும் அனைவரின் நன்மைக்காக இந்த சிக்கலைத் தீர்ப்பதில் ஒத்துழைப்பு வழங்க ஓப்பதலை வெளிப் படுத்தியுள்ளனர். ரூமா சிலாங்கூர் கூ மோரிப் அங்குன் என்பது சமீபத்திய ஆண்டுகளில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள மாநில அரசின் மலிவு வீட்டுவசதி திட்டங்களில் அரசின் பங்கு 0.1 சதவீதம் ஆகும். முன்பு, மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, சிலாங்கூர் அரசு தாமதமான திட்டத்திற்கு ஒரு தீர்வு கண்டு பிடிப்பதில் உறுதியாக இருப்பதாக கூறியிருந்தார்.
"இப்போது எங்கள் கவனம், இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டு முடிக்க விருப்பமுள்ள ஒரு மேம்பாட்டாளரை அடையாளங்காணும் வேலைகள் உள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.




