கோலாலம்பூர், நவ 21- கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் மதியம் 1 மணிவரை இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் மெட் மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஞ்சோங் , சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர், அலோர்காஜா மற்றும் டாங்காங் போன்ற மாவட்டங்களில் வானிலை மோசமடையக்கூடும் என்று அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு 20 மி.மீ-க்கு மேல் அதிக கனமழை பெய்வதற்கான ஆரம்ப அறிகுறிகளால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இடி மின்னலுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கைகள் குறுகிய காலத்திற்கு மட்டுமே அதாவது அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதையும் மெட்மலேசியா நினைவூட்டியுள்ளது.






