ad

வைசாகி, உகாதி மற்றும் ஓணம் போன்ற பன்முகப் பண்பாட்டு விழாக்களுக்கு 1.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு- பாப்பாராய்டு

19 நவம்பர் 2025, 10:15 AM
வைசாகி, உகாதி மற்றும் ஓணம் போன்ற பன்முகப் பண்பாட்டு விழாக்களுக்கு 1.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு- பாப்பாராய்டு

ஷா ஆலம், நவம்பர் 19- சிலாங்கூர் மாநில அரசு, இந்திய சமூக முன்னேற்றத் திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில், 2026ஆம் ஆண்டுக்கான நிதியை 2.7 மில்லியன் ரிங்கிட் என உயர்த்தியுள்ளது. இது, இவ்வாண்டின் 2.185 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டைக் காட்டிலும் அதிகமாகும்.

இந்த நிதி அதிகமாகக் கேட்கப்படும் கல்வி உதவி மற்றும் நலத்திட்டங்களை மையமாகக்கொண்டு வழங்கப்படவுள்ளதாக சிலாங்கூர் மாநில மனிதவளம், மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் கூறினார்.

“சிலாங்கூர் அரசு, குறிப்பாக பி40 குழுவைச் சேர்ந்த இந்தியச் சமூகக் குழந்தைகள் தரமான கல்வியிலிருந்து விலகாமல் இருப்பதை உறுதி செய்ய முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இந்த உதவி, அவர்களுக்கு மேலும் உயர்கல்வி தொடரும் வாய்ப்பை வழங்குகிறது,” என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மொத்த ஒதுக்கீட்டில், 1.2 மில்லியன் ரிங்கிட் பி40 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளி பேருந்து பயண உதவித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 1.5 மில்லியன் ரிங்கிட் உயர் கல்வி நிறுவனங்களின் கட்டண உதவித் திட்டத்திற்காக வழங்கப்படுகிறது.

இதனுடன், மாநில அரசு தீபாவளி, பொங்கல், தைப்பூசம், வைசாகி, உகாதி மற்றும் ஓணம் போன்ற பன்முகப் பண்பாட்டு நிகழ்வுகள் மற்றும் விழாக்களுக்காகவும் 1.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது. இவற்றில் சில விழாக்கள் முதல் முறையாக மாநில அளவில் சேர்க்கப்பட்டுள்ளன. “இந்த பண்பாட்டு ஆதரவு, வெறும் கொண்டாட்டத்தை மட்டும் குறிக்கவில்லை; இது இந்திய சமூகத்தின் ஒற்றுமையையும் பண்பாட்டு அடையாளத்தையும் மேலும் வலுப்படுத்துகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.