தோக்கியோ, நவம்பர் 19- ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு கடற்கரை நகரில் 170க்கும் மேற்பட்ட கட்டடங்களில் தீ பரவி நெற்று இரவு முழுவதும் எரிந்து இன்னும் முற்றிலும் அணைக்கப்படவில்லை என்று தேசிய தீயணைப்பு நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.
ஓய்டா நகரின் சாகனோசெக்கி பகுதியில் உள்ள சுமார் 175 குடியிருப்பாளர்கள், நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 5.40 மணியளவில் தீ கிளம்பிய பிறகு அவசர பள்ளியிடங்களுக்கு தப்பியதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்தது.
ஒருவர் இன்னும் காணாமல் போயுள்ள நிலையில், தீயின் காரணம் தற்போது விசாரணைக்கு உட்பட்டுள்ளது. உள்ளூரில் வெளியாகிய கானொலியில் , மீன்பிடி துறைமுகம் பார்த்துக் கொண்டுள்ள மலை பகுதி நகரில் உள்ள வீடுகள் மண் சுரண்டலாகி, கடுமையான புகை எழும் நிலையை காட்டியதாக தெரிவித்தனர்.
மேலும் தீ அருகிலுள்ள காடு மற்றும் மலைச்சரிவுகளிலும் பரவியுள்ளதாக உள்ளூர் செய்தித்தளங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஜப்பான் பிரதமர் பிரதமர் சனே டகாய்ச்சி, ஒயிடா ஆளுநரின் கோரிக்கையால் இராணுவ தீயணைப்பு ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.
தன்னார்வலர்கள் பதிவு; பெண்கள் பங்கேற்பு முயற்சி மேம்படுத்தப்பட்டுள்ளது
ஷா ஆலம், நவம்பர் 19- சிலாங்கூர் 2026 மலேசியா விளையாட்டு போட்டிகளில் (சுக்மா) பங்கேற்க 812 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர் என்று சிலாங்கூர் மாநில விளையாட்டு துறையின் மேம்பாட்டு செயற்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
சிலாங்கூர் இளைஞர் மாநாடு 2025 மற்றும் ஆசியான் விளையாட்டு தொழில் கண்காட்சி 2025 மூலம் அனைத்து பதிவுகளும் பெறப்பட்டதாக அவர் கூறினார். “இந்த நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கான முக்கிய தேவைகளில் ஒன்றே தன்னார்வலர் குழு ஆகும். தற்போது, பங்கேற்பு வாய்ப்பு முதன்மையாக பள்ளி மாணவர்கள், உயர்கல்வி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
“செப்டம்பரில் நடைபெற்ற மாநாட்டில் 291 பேர் பதிவு செய்தனர், அதே நேரத்தில் ஆசியன் விளையாட்டு தொழில் கண்காட்சியில் 521 பேர் பதிவு செய்தனர்,” என்று அவர் கூறினார்.
இதற்கு முன், பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்க சமூக ஊடகம் வழியாக தன்னார்வலர்களை அதிகரிக்கும் முயற்சியை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார். பல அமைப்புகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் இளையோர் மற்றும் விளையாட்டு அமைச்சு, தேசிய விளையாட்டு கவுன்சில், சிலாங்கூர் மாநில கல்வித்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் (PBT) ஆகியோர் ஆவர்.
மேலும் சுக்மா சிலாங்கூர் குழுக்களுக்கு தேவையான நுகர்வுப்பொருட்கள் மற்றும் சப்ளை வசதிகளையும் ஏற்பாடு செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.




