ad

கே.டி.எம்.பி  24 மணி நேரத்தில் 82,896 ரயில் டிக்கெட்டுகள் விற்றுள்ளது

19 நவம்பர் 2025, 4:43 AM
கே.டி.எம்.பி  24 மணி நேரத்தில் 82,896 ரயில் டிக்கெட்டுகள் விற்றுள்ளது
கே.டி.எம்.பி  24 மணி நேரத்தில் 82,896 ரயில் டிக்கெட்டுகள் விற்றுள்ளது
கே.டி.எம்.பி  24 மணி நேரத்தில் 82,896 ரயில் டிக்கெட்டுகள் விற்றுள்ளது

கோலாலம்பூர், நவம்பர் 19- கெராத்தாப்பி தானா மெலாயு பெர்ஹாட் (கே.டி.எம்.பி) நேற்று தொடங்கிய விற்பனைக்கு 24 மணி நேரத்திலேயே 82,896 ரயில் டிக்கெட்டுகள் விற்று, குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளது. இந்த டிக்கெட்டுகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை பயணம் செய்யும் பயணிகளைச் சார்ந்தவை.

குறுகிய நேரத்திலேயே ஏற்பட்ட பெரும் கோரிக்கை மக்கள் ரயில் சேவையின் மீது கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் விருப்பத்தை வெளிப் படுத்துகிறது என்று கே.டி.எம்.பியின் தொழில்நுட்பத் தலைவர் அக்மத் நிசாம் முகமட் அமின் தெரிவித்தார்.

வெறும் 24 மணி நேரத்திலேயே கிடைத்த இந்த அபாரமான ஆதரவு, பயணிகளிடையே ரயில் இன்னும் முதன்மையான தேர்வாக இருப்பதை நிரூபிக்கிறது என்றார் அவர். “டிக்கெட் கொள்முதல் செயல்முறையில் தோல்வியடைந்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தாலும், மேலும் மென்மையான மற்றும் நம்பகமான கொள்முதல் அனுபவத்தை வழங்குவதற்காக எங்கள் அமைப்பை மேம்படுத்துவதில் கே.டி.எம்.பி தொடர்ந்து உறுதியாக செயல்படும்,” என்று கே.டி.எம்.பி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

தற்போது 79 பரிவர்த்தனைகள் வெற்றியளிக்காதவையாகப் பதிவாகியுள்ளதாக கே.டி.எம்.பி தெரிவித்துள்ளது. அவற்றுக்கான திருப்பிச் செலுத்துதல் தொடர்பான செயல்முறைகள் நடைபெற்று வருவதாகவும், வங்கிகளின் நடைமுறைகளுக்கு இணங்க 14 நாட்களுக்குள் பணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், புதிய ரயில் தொகுதிகளை கட்டம் கட்டமாகச் சேர்க்க அரசாங்கம் போக்குவரத்து அமைச்சின் வழியாக வழங்கிவரும் ஆதரவுக்கு கே.டி.எம்.பி நன்றியைத் தெரிவித்துள்ளது. இது ரயில் சேவையின் அடிக்கடி இயக்கும் திறன், கொள்ளளவு மற்றும் பயணிகளின் வசதியை மேம்படுத்த உதவும்.

வரவிருக்கும் விடுமுறை காலத்தை முன்னிட்டு, பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை முன்கூட்டியே வகுக்கவும், சமீபத்திய ரயில் நேர அட்டவணையை கே.டி.எம்.பி மொபைல் பயன்பாட்டின் மூலம் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு, அவர்கள் கே.டி.எம்.பி இணையத் தளத்திற்குச் செல்லவோ அல்லது கே.டி.எம்.பி அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்வோ முடியும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.