ad

2048ஆம் ஆண்டிற்குள் மலேசியாவில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 14% ஆக உயரும்

17 நவம்பர் 2025, 9:46 AM
2048ஆம் ஆண்டிற்குள் மலேசியாவில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 14% ஆக உயரும்

கோத்தா பாரு, நவ 17: எதிர்வரும் 2048ஆம் ஆண்டிற்குள் மலேசியாவின் மக்கள் தொகையில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 14% ஆக உயரும் என பொது சேவை துறையின் (ஜேபிஏ) ஓய்வூதிய பிரிவு இயக்குநர் டத்தோ முகமட் ஷாஹ்ரிம் ஊசின் தெரிவித்தார்.

இந்த மாற்றத்திற்கு தயாராக ஏதுவாக, அரசாங்கம் 2025-2045 தேசிய முதியோர் பெருந்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

“இந்த திட்டம் ஆறு முக்கிய துறைகளில் கவனம் செலுத்துகிறது. அவை பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, சமூகப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நீண்டகால பராமரிப்பு ஆகியவை ஆகும்,” என்று ஷாஹ்ரிம் ``MyPesara Awards 2025`` விழாவில் தெரிவித்தார்.

இது நாடு முழுவதும் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதில் பொது சேவை துறைக்கு வழிகாட்டியாக செயல்படும்.

ஓய்வூதிய செயல்முறைகளின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் மூலம், ஒவ்வொரு ஓய்வூதியரும் தங்களின் நன்மைகளை விரைவாகவும் திறம்படவும் பெறுவதை ஜேபிஏ உறுதிப்படுத்த முயல்கிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.