உணவு சுவை பிடிக்கவில்லை என கோபத்தில் வாடிக்கையாளரால் பெண் குத்தி கொலை

17 நவம்பர் 2025, 6:47 AM
உணவு சுவை பிடிக்கவில்லை என கோபத்தில்  வாடிக்கையாளரால் பெண் குத்தி கொலை

புக்கிட் மெர்தாஜாம், 17 நவம்பர்: நேற்று இரவு, லோரோங் புக்கிட் ஜுரு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், சமைத்த உணவு சுவை பிடிக்கவில்லை என கைகலப்பு ஏற்பட்ட பின்னர் ஆடவர் ஒருவர் மியான்மார் பெண்மணியான சமையலாளரை கத்தியால் தாக்கியுள்ளார்.

40 வயதுக்குட்பட்ட அப்பெண், கடுமையான காயங்களால் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ அஜிசி இஸ்மாயில், சம்பவத்தை உறுதிப்படுத்தி, மூன்று மியான்மார் குடியரசினர், அதில் சந்தேக நபர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை விசாரணைக்கு கைதுசெய்யப்பட்டதாக தெரிவித்தார்.

சம்பவ நேரத்தில் சந்தேக நபர் மது அருந்திய நிலையில் இருந்தார் என்று நம்பப்படுகிறது. தற்போது விசாரணை, குற்றச் சட்டத்தின் பிரிவு 302 கீழ் நடைபெற்று வருகிறது. மரணமடைந்த பெண்ணின் உடலை செபராங் ஜெயா மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைச் செய்ய அனுப்பப்பட்டது. மேலும் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.